| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 3582 | திருவாய்மொழி || (9-3–ஓராயிரமாய்) (எம்பெருமானோடு உள்ள தொடர்பினைக் கண்ட ஆழ்வார் அவனது சீலத்தில் ஈடுபட்டுக் கூறுதல்) (நித்ய ஸுரிகளுக்குப் பரம போக்யனாயிருந்து வைத்து அங்கு நின்றும் போந்து க்ருஷ்ணனாயவதரித்து நம்மையும் நித்யஸுரிகள் நடுவே கொண்டு வைக்குமவனாயிருக்கிற எம்பெருமானை ஒருவாறு கிட்டப்பெற்றோம், நெஞ்சே அவனை விடாதேகொள் என்று தம்திருவுள்ளத்தை நோக்கி யருளிச்செய்கிற பாசுரமிது.) 4 | மருந்தே நங்கள் போக மகிழ்ச்சிக்கு என்று பெரும் தேவர் குழாங்கள் பிதற்றும் பிரான் கருந்தேவன் எம்மான் கண்ணன் விண்ணுலகம் தருந்தேவனை சோரேல் கண்டாய் மனமே–9-3-4 | நங்கள் போகம் மகிழ்ச்சிக்கு மருந்தே என்று,Nangal pogam magizhchikku marundhe endru - உன்னுடைய அநுபவத்தாலே எங்களுக்கு வரும் ஆனந்தத்தை ஸாத்மிப்பிக்கும் மருந்தானவனே என்று பெருந்தேவர் குழாங்கள்,Perundhevar kuzhaangal - நித்பஸுரிகணங்கள் பிதற்றும் பிரான்,Pithatrum piraan - வாய்வெருவும்படியான ஸ்வாமியாய் கருதேவன்,Karudhevan - கரிய திருமேனியை யுடையனாய் எல்லாம் கண்ணன்,Ellam Kannaan - எமக்கு ஸ்வாமியான க்ருஷ்ணனாய் விண் உலகம் தருமதேவனை,Vin ulagam dharumadhevanai - பரமபத போகத்தைத் தரவானான பெருமானை மனனே சோரேல் கண்டாய்,Manane sorel kandai - நெஞ்சே நழுவவிடாதே கொள் |