Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 3583 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
3583திருவாய்மொழி || (9-3–ஓராயிரமாய்) (எம்பெருமானோடு உள்ள தொடர்பினைக் கண்ட ஆழ்வார் அவனது சீலத்தில் ஈடுபட்டுக் கூறுதல்) (கீழ்ப்பாட்டில் சொன்னதையே வற்புறுத்திச் சொல்லுகிறாரிதில், உலகில் ஒருவர் ஒரு விஷயஞ்சொன்னால் அதனை ஸாமான்யமென்று கருதி உபேக்ஷித்திருப்பாருமுண்டே. அப்படி உபேக்ஷிக்கத்தக்க வார்த்தையன்றிது. அவசியம் கைக்கொள்ளத் தக்கது என்று ருசிப்பிக்கிறபடி.) 5
மனமே யுன்னை வல்வினையேன் இரந்து
கனமே சொல்லினேன் இது சோரேல் கண்டாய்
புனமேவிய பூந்தண் துழாய் அலங்கல்
இனமேதும் இலானை அடைவதுமே–9-3-5
மனமே,Maname - நெஞ்சே !
வல் வீனையேன்,Val veenaiyen - வல்லினையேனான நான்
உன்னை இரந்து,Unnai irandhu - உன்னை வேண்டிக் கொண்டு
கனமே சொல்லினேன்,Kaname sollinaen - திடமாகவொன்று சொல்லுகிறேன்.
இது சோரேல்கண்டாய்,edu sorel kandai - இதனை நழுவவிடாதே கொள்
புனம் மேலிய பூ பூதண் அழாய் அலங்கல்,Punaam meeliya poo poothan azhaai alangkal - (அதாவதென்னென்னில்) தன்னிலத்தில் வளர்ந்த செல்லித் திருத்துழாய் மாலையையுடையனாய்
எதும் இனம் இலானை,Edhum inam ilaanaai - (அவ்வழக்கு) ஒரு விதத்திலும் ஒப்பில்லாதவனான பெருமானை
அடைவதும்,Adaivadhum - கிட்டவேணு மென்கிறலிதான்