| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 3584 | திருவாய்மொழி || (9-3–ஓராயிரமாய்) (எம்பெருமானோடு உள்ள தொடர்பினைக் கண்ட ஆழ்வார் அவனது சீலத்தில் ஈடுபட்டுக் கூறுதல்) (கீழ்ப்பாட்டில் தம் திருவுள்ளத்தை வேண்டினாரே; வேண்டுகோள் பலித்து அது நினைந்து நைந்து உள் கரைந்துருகுகிறபடியைப் பேசுகிறாரிதில்.) 6 | அடைவதும் அணியார் மலர் மங்கை தோள் மிடைவதும் அசுரர்க்கு வெம்போர்களே கடைவதும் கடலுள் அமுதம் என் மனம் உடைவதும் அவற்கே யொருங்காகவே–9-3-6 | மலர் மங்கை அணி தோள்,Malar mangai ani thol - பெரிய பிராட்டியாருடைய ஆபரணங்கள் பொருந்திய திருத்தோள்களையே அடைவதும்,Adaivadhum - ஸம்க்லேஷிப்பதும் அசுரர்க்கு வெம்போர்களே,Asurarkku vemporkal - ஆஸுரப்ரக்ருதிகளோடு வெவ்விய போர்களை செய்வதே நெஞ்சினால் நினைப்பதும் கடல் அமுதம்,Kadal amudham - கடலிலுள்ள அமுதத்தையே கடைந்து கொடுப்பதும் அவற்கே,Avarkae - அப்பெருமானுக்கே எம் மனம் ஒருங்காகவே உடைவதும்,Em manam orungakave udavadhum - என்னெஞ்ச ஒருபடிப்பட சிதிலமாவதும். |