Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 3584 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
3584திருவாய்மொழி || (9-3–ஓராயிரமாய்) (எம்பெருமானோடு உள்ள தொடர்பினைக் கண்ட ஆழ்வார் அவனது சீலத்தில் ஈடுபட்டுக் கூறுதல்) (கீழ்ப்பாட்டில் தம் திருவுள்ளத்தை வேண்டினாரே; வேண்டுகோள் பலித்து அது நினைந்து நைந்து உள் கரைந்துருகுகிறபடியைப் பேசுகிறாரிதில்.) 6
அடைவதும் அணியார் மலர் மங்கை தோள்
மிடைவதும் அசுரர்க்கு வெம்போர்களே
கடைவதும் கடலுள் அமுதம் என் மனம்
உடைவதும் அவற்கே யொருங்காகவே–9-3-6
மலர் மங்கை அணி தோள்,Malar mangai ani thol - பெரிய பிராட்டியாருடைய ஆபரணங்கள் பொருந்திய திருத்தோள்களையே
அடைவதும்,Adaivadhum - ஸம்க்லேஷிப்பதும்
அசுரர்க்கு வெம்போர்களே,Asurarkku vemporkal - ஆஸுரப்ரக்ருதிகளோடு வெவ்விய போர்களை செய்வதே நெஞ்சினால் நினைப்பதும்
கடல் அமுதம்,Kadal amudham - கடலிலுள்ள அமுதத்தையே கடைந்து கொடுப்பதும்
அவற்கே,Avarkae - அப்பெருமானுக்கே
எம் மனம் ஒருங்காகவே உடைவதும்,Em manam orungakave udavadhum - என்னெஞ்ச ஒருபடிப்பட சிதிலமாவதும்.