Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 3585 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
3585திருவாய்மொழி || (9-3–ஓராயிரமாய்) (எம்பெருமானோடு உள்ள தொடர்பினைக் கண்ட ஆழ்வார் அவனது சீலத்தில் ஈடுபட்டுக் கூறுதல்) (எம்பெருமான் இவ்விடத்தே செய்த சேஷ்டிதங்களை யநுஸந்தித்து உருகின நெஞ்சு அன்னவனுறையும் திருநாட்டைச் சென்று காணவிழைகின்ற தென்கிறாரிப்பாட்டில்.) 7
ஆகம் சேர் நரசிங்கமதாகி ஓர்
ஆகம் வள்ளுகிரால் பிளந்தான் உறை
மாகவைகுந்தம் காண்பதற்கு என் மனம்
ஏகம் எண்ணும் இராப்பகல் இன்றியே–9-3-7
ஆகம்சேர்,Aagamseer - ஒரு வடிவிலே பொருந்தின
நரசிங்கம் அது ஆகி,Narasingam adhu aagi - மதுஷ்யமூர்த்தியும், ஸிம்ஹ மூர்த்தி யுமுடையனாகி
ஓர் ஆகம்,Or aagam - (இரணியனது) ஓரு உவகை
பிளந்தான் உறை,Pilandhaan urai - பிளந்தவனான எம்பெருமான்
மாகம் வைகுந்தம்,Maagam vaikundham - பரமாகாசமான ஸ்ரீவைகுண்டத்தை
காண்பதற்கு,Kaanpatharku - காண்கைக்கு
இரா பகல் இன்றியே,Iraa paghal indriye - இரவென்றும் பகலென்றும் வாசியின்றிக்கே
என் மனம் ஏகம் எண்ணும்,En manam egam ennum - என்மனம் ஒரே விதமாக எண்ணுகின்றது