| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 3585 | திருவாய்மொழி || (9-3–ஓராயிரமாய்) (எம்பெருமானோடு உள்ள தொடர்பினைக் கண்ட ஆழ்வார் அவனது சீலத்தில் ஈடுபட்டுக் கூறுதல்) (எம்பெருமான் இவ்விடத்தே செய்த சேஷ்டிதங்களை யநுஸந்தித்து உருகின நெஞ்சு அன்னவனுறையும் திருநாட்டைச் சென்று காணவிழைகின்ற தென்கிறாரிப்பாட்டில்.) 7 | ஆகம் சேர் நரசிங்கமதாகி ஓர் ஆகம் வள்ளுகிரால் பிளந்தான் உறை மாகவைகுந்தம் காண்பதற்கு என் மனம் ஏகம் எண்ணும் இராப்பகல் இன்றியே–9-3-7 | ஆகம்சேர்,Aagamseer - ஒரு வடிவிலே பொருந்தின நரசிங்கம் அது ஆகி,Narasingam adhu aagi - மதுஷ்யமூர்த்தியும், ஸிம்ஹ மூர்த்தி யுமுடையனாகி ஓர் ஆகம்,Or aagam - (இரணியனது) ஓரு உவகை பிளந்தான் உறை,Pilandhaan urai - பிளந்தவனான எம்பெருமான் மாகம் வைகுந்தம்,Maagam vaikundham - பரமாகாசமான ஸ்ரீவைகுண்டத்தை காண்பதற்கு,Kaanpatharku - காண்கைக்கு இரா பகல் இன்றியே,Iraa paghal indriye - இரவென்றும் பகலென்றும் வாசியின்றிக்கே என் மனம் ஏகம் எண்ணும்,En manam egam ennum - என்மனம் ஒரே விதமாக எண்ணுகின்றது |