Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 3586 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
3586திருவாய்மொழி || (9-3–ஓராயிரமாய்) (எம்பெருமானோடு உள்ள தொடர்பினைக் கண்ட ஆழ்வார் அவனது சீலத்தில் ஈடுபட்டுக் கூறுதல்) (மாசுவைகுந்தம் காண்பதற்கு மனோரதங்கொண்ட ஆழ்வாரை நோக்கி எம்பெருமான் ஆழ்வீர் ! சரீரஸம்பந்த மற்ற பின்பு போய் அநுபவிக்கும் பரமபதத்தையா விரும்புகிறீர்; இந்த சரீரத்தோடேயநுபவிக்கும் திருமாலை இந்நிலத்தேயுள்ளதன்றோ; இதை விட்டு மாகவைகுந்தங்காண வாசைப்படுவதில் என்ன விசேஷம்? என்ன; இது வாஸ்தவமே; திருவேங்கடமலை இந்நிலத்தேயுள்ளது தான். அதனாலெனக்கென்ன? காலாழும் நெஞ்சழியும் கண்சுழலுமென்றிருக்கிற நான் திருமலையில் சென்று அநுபவிக்க பாக்யஹீநனன்றோ தேவர்களேயன்றோ அங்குச் சென்று தொழுவார்; ஆகவே திருமலையோடு பரமபதத்தோடு வாசியில்லையே யெனக்கு என்கிறார்.) 8
இன்றிப் போக இருவினையும் கெடுத்து
ஒன்றி யாக்கை புகாமை உய்யக் கொள்வான்
நின்ற வேங்கடம் நீணிலத் துள்ளத்து
சென்று தேவர்கள் கை தொழுவார்களே–9-3-8
இருவினையும்,Irvinaiyum - புண்ணியம் பாவம் என்கிற இரண்டு கருமங்களையும்
இன்றிபோக கெடுத்து,Indri pogak keduththu - ஸத்தையழிந்து போம்படி தொலைத்து
ஆக்கை ஒன்றி புகாமை,Aakkai onri pugamai - (ஆத்மா) சரீரத்தோடே சரீரமாகக் கலந்துபோகாதபடி
உய்யக் கொள்வான்,Uyyaik kolvaan - உஜ்ஜீவனப்படுத்து மெம்பெருமான்
நின்ற,Nindra - (அடியார்களை யெதிர்பார்த்து) நிற்கிற
வேங்கடம்,Vengadam - திருவேங்கடமலை
நீள் நிலத்து உள்ளது,Neel nilathu ulladhu - பரந்த இவ்வுலகத்தே யுள்ள தொன்றாம்
சென்று,Sendru - (அங்கே) சென்று சிட்டி
கை தொழுவார்கள்,Kai thozhuvargal - கை தொழுமலர்கள்
தேவர்களே,Thevargale - (மநுஷ்யான்றிக்கே) தேவர்களேயாவர்.