| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 3586 | திருவாய்மொழி || (9-3–ஓராயிரமாய்) (எம்பெருமானோடு உள்ள தொடர்பினைக் கண்ட ஆழ்வார் அவனது சீலத்தில் ஈடுபட்டுக் கூறுதல்) (மாசுவைகுந்தம் காண்பதற்கு மனோரதங்கொண்ட ஆழ்வாரை நோக்கி எம்பெருமான் ஆழ்வீர் ! சரீரஸம்பந்த மற்ற பின்பு போய் அநுபவிக்கும் பரமபதத்தையா விரும்புகிறீர்; இந்த சரீரத்தோடேயநுபவிக்கும் திருமாலை இந்நிலத்தேயுள்ளதன்றோ; இதை விட்டு மாகவைகுந்தங்காண வாசைப்படுவதில் என்ன விசேஷம்? என்ன; இது வாஸ்தவமே; திருவேங்கடமலை இந்நிலத்தேயுள்ளது தான். அதனாலெனக்கென்ன? காலாழும் நெஞ்சழியும் கண்சுழலுமென்றிருக்கிற நான் திருமலையில் சென்று அநுபவிக்க பாக்யஹீநனன்றோ தேவர்களேயன்றோ அங்குச் சென்று தொழுவார்; ஆகவே திருமலையோடு பரமபதத்தோடு வாசியில்லையே யெனக்கு என்கிறார்.) 8 | இன்றிப் போக இருவினையும் கெடுத்து ஒன்றி யாக்கை புகாமை உய்யக் கொள்வான் நின்ற வேங்கடம் நீணிலத் துள்ளத்து சென்று தேவர்கள் கை தொழுவார்களே–9-3-8 | இருவினையும்,Irvinaiyum - புண்ணியம் பாவம் என்கிற இரண்டு கருமங்களையும் இன்றிபோக கெடுத்து,Indri pogak keduththu - ஸத்தையழிந்து போம்படி தொலைத்து ஆக்கை ஒன்றி புகாமை,Aakkai onri pugamai - (ஆத்மா) சரீரத்தோடே சரீரமாகக் கலந்துபோகாதபடி உய்யக் கொள்வான்,Uyyaik kolvaan - உஜ்ஜீவனப்படுத்து மெம்பெருமான் நின்ற,Nindra - (அடியார்களை யெதிர்பார்த்து) நிற்கிற வேங்கடம்,Vengadam - திருவேங்கடமலை நீள் நிலத்து உள்ளது,Neel nilathu ulladhu - பரந்த இவ்வுலகத்தே யுள்ள தொன்றாம் சென்று,Sendru - (அங்கே) சென்று சிட்டி கை தொழுவார்கள்,Kai thozhuvargal - கை தொழுமலர்கள் தேவர்களே,Thevargale - (மநுஷ்யான்றிக்கே) தேவர்களேயாவர். |