Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 3588 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
3588திருவாய்மொழி || (9-3–ஓராயிரமாய்) (எம்பெருமானோடு உள்ள தொடர்பினைக் கண்ட ஆழ்வார் அவனது சீலத்தில் ஈடுபட்டுக் கூறுதல்) (ப்ரயோஜநாந்தர பார்களாய் அடிமைச் சுவடு அறியாதவர்களான பிரமன் முதலிய தேவர்களுக்கும் முகங்கொடுக்குமவனான உன்னுடைய சீலகுணம் என் வாக்குக்கு நிலமன்றோ யென்கிறார்.) 10
தாள தாமரையான் உனதுந்தியான்
வாள் கொள் நீள் மழு வாளி உன்னாகத்தான்
ஆளராய்த் தொழுவாரும் அமரர்கள்
நாளும் என் புகழ் கோ உனசீலமே–9-3-10
தாள தாமரையான்,Thaal thamaraiyaan - காளையுடைய தாமரையிற் பிறந்த பிரான்
உனது உந்தியான்,Unadhu unthiyaan - உன்னுடைய உந்தையைப் பற்றினவன்
வாள் கொள் நின் மழு ஆளி,Vaal kol nin mazu aali - ஒளி பொருந்திய நீண்ட மழுப்படையை யுடைய ருத்தன்
உன் ஆகத்தான்,Un aakathaan - உனது திருமேனியில் ஒரு பந்தத்தைப் பற்றினவன்
ஆளர் ஆய் தொழுவாரும் அமரர்கள்,Aalar aai thozhuvaarum amararhal - அடியார்களாய்ப் பணிகின்றவர்களும் தேவர்கள்
உன் சீலம்,Un seelam - உன்னுடைய சீல குணத்தை
நாளும் என் புகழ்கோ,Naalum en pugazhko - காலமெல்லாம் புகழ்ந்தாலும் என்னவென்று புகழ்வேன்