| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 3590 | திருவாய்மொழி || (9-4–மையார் கருங்கண்ணி) (எம்பெருமானைக் காண விரும்பி அழைத்து தாம் விரும்பிய வண்ணமே கண்டு மகிழ்ந்தமை கூறல்) (பெரிய பிராட்டியாரோடும் திவ்யாயுதங்களோடுஞ் சேர்ந்த சேர்த்தியைக் காண்பதற்குத் தமது கண்கள் விடாய்த்திருக்கிறபடியைப் பேசுகிறாரிதில். *** வைகுண்டேது பரே லோகே ச்ரியா ஸார்த்தம் ஜகத்பதிய ஆஸ்தே விஷ்ணுரசிந்த்யாத்மா பக்தைர்பாகவதைஸ் ஸஹ என்றோதப்பட்ட நிலைமையைக் கண்டு களிக்க வேணுமென்கிறாராயிற்று.) 1 | மையார் கருங்கண்ணி கமல மலர்மேல் செய்யாள் திரு மார்வினில் சேர் திருமாலே வெய்யார் சுடர் ஆழி சுரி சங்கம் ஏந்தும் கையா உனைக் காணக் கருதும் என் கண்ணே–9-4-1 | மை ஆர் கருகண்ணி,Mai aar karukanni - மையணிக் கருங்கண்களையுடையவளும் கமலம் மலர் மேல்,Kamalam malar meel - தாமரைப் பூவின் மேலிருப்பவளுமான செய்யாள்,Seyyaal - சிவந்த நிறமுடைய பிராட்டி திருமார்வினில் சேர்,Thirumaarvinil seer - திருமார்பிலே சேரப்பெற்ற திருமாலே,Thirumaale - ச்ரிய பதியே வெய்யார்,Veyyaar - ம்மை விஞ்சின சுடர் ஆழி,Sudar aazhi - ஒளிமிக்க திருவாழியையும் அரி சங்கம்,Ari sangam - அழகிய ஸ்ரீபாஞ்ச ஸந்யத்தையும் பந்தும்கையா,Pandhum kaiyaa - ஏந்தின திருக்கைகளையுடையவனே என் கண்,En kan - எனது கண்களானவை உன்னை காண கருதும்,Unnai kaana karudhum - உன்னைக் காண விரும்பாநின்றன. |