திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 3590 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
3590திருவாய்மொழி || (9-4–மையார் கருங்கண்ணி) (எம்பெருமானைக் காண விரும்பி அழைத்து தாம் விரும்பிய வண்ணமே கண்டு மகிழ்ந்தமை கூறல்) (பெரிய பிராட்டியாரோடும் திவ்யாயுதங்களோடுஞ் சேர்ந்த சேர்த்தியைக் காண்பதற்குத் தமது கண்கள் விடாய்த்திருக்கிறபடியைப் பேசுகிறாரிதில். *** வைகுண்டேது பரே லோகே ச்ரியா ஸார்த்தம் ஜகத்பதிய ஆஸ்தே விஷ்ணுரசிந்த்யாத்மா பக்தைர்பாகவதைஸ் ஸஹ என்றோதப்பட்ட நிலைமையைக் கண்டு களிக்க வேணுமென்கிறாராயிற்று.) 1
மையார் கருங்கண்ணி கமல மலர்மேல் செய்யாள் திரு மார்வினில் சேர் திருமாலே வெய்யார் சுடர் ஆழி சுரி சங்கம் ஏந்தும் கையா உனைக் காணக் கருதும் என் கண்ணே–9-4-1
பதவுரை Show / Hide
மை ஆர் கருகண்ணி,Mai aar karukanni - மையணிக் கருங்கண்களையுடையவளும்
கமலம் மலர் மேல்,Kamalam malar meel - தாமரைப் பூவின் மேலிருப்பவளுமான
செய்யாள்,Seyyaal - சிவந்த நிறமுடைய பிராட்டி
திருமார்வினில் சேர்,Thirumaarvinil seer - திருமார்பிலே சேரப்பெற்ற
திருமாலே,Thirumaale - ச்ரிய பதியே
வெய்யார்,Veyyaar - ம்மை விஞ்சின
சுடர் ஆழி,Sudar aazhi - ஒளிமிக்க திருவாழியையும்
அரி சங்கம்,Ari sangam - அழகிய ஸ்ரீபாஞ்ச ஸந்யத்தையும்
பந்தும்கையா,Pandhum kaiyaa - ஏந்தின திருக்கைகளையுடையவனே
என் கண்,En kan - எனது கண்களானவை
உன்னை காண கருதும்,Unnai kaana karudhum - உன்னைக் காண விரும்பாநின்றன.