Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 3590 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
3590திருவாய்மொழி || (9-4–மையார் கருங்கண்ணி) (எம்பெருமானைக் காண விரும்பி அழைத்து தாம் விரும்பிய வண்ணமே கண்டு மகிழ்ந்தமை கூறல்) (பெரிய பிராட்டியாரோடும் திவ்யாயுதங்களோடுஞ் சேர்ந்த சேர்த்தியைக் காண்பதற்குத் தமது கண்கள் விடாய்த்திருக்கிறபடியைப் பேசுகிறாரிதில். *** வைகுண்டேது பரே லோகே ச்ரியா ஸார்த்தம் ஜகத்பதிய ஆஸ்தே விஷ்ணுரசிந்த்யாத்மா பக்தைர்பாகவதைஸ் ஸஹ என்றோதப்பட்ட நிலைமையைக் கண்டு களிக்க வேணுமென்கிறாராயிற்று.) 1
மையார் கருங்கண்ணி கமல மலர்மேல்
செய்யாள் திரு மார்வினில் சேர் திருமாலே
வெய்யார் சுடர் ஆழி சுரி சங்கம் ஏந்தும்
கையா உனைக் காணக் கருதும் என் கண்ணே–9-4-1
மை ஆர் கருகண்ணி,Mai aar karukanni - மையணிக் கருங்கண்களையுடையவளும்
கமலம் மலர் மேல்,Kamalam malar meel - தாமரைப் பூவின் மேலிருப்பவளுமான
செய்யாள்,Seyyaal - சிவந்த நிறமுடைய பிராட்டி
திருமார்வினில் சேர்,Thirumaarvinil seer - திருமார்பிலே சேரப்பெற்ற
திருமாலே,Thirumaale - ச்ரிய பதியே
வெய்யார்,Veyyaar - ம்மை விஞ்சின
சுடர் ஆழி,Sudar aazhi - ஒளிமிக்க திருவாழியையும்
அரி சங்கம்,Ari sangam - அழகிய ஸ்ரீபாஞ்ச ஸந்யத்தையும்
பந்தும்கையா,Pandhum kaiyaa - ஏந்தின திருக்கைகளையுடையவனே
என் கண்,En kan - எனது கண்களானவை
உன்னை காண கருதும்,Unnai kaana karudhum - உன்னைக் காண விரும்பாநின்றன.