Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 3591 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
3591திருவாய்மொழி || (9-4–மையார் கருங்கண்ணி) (எம்பெருமானைக் காண விரும்பி அழைத்து தாம் விரும்பிய வண்ணமே கண்டு மகிழ்ந்தமை கூறல்) (கீழ்ப்பாட்டில் தம்முடைய கண்களுக்குண்டான நசையைப் பேசினார். இப்பாட்டில் தமக்கும் தம்முடைய நெஞ்சுக்குமுண்டான சாபலத்தைச் சொல்லுகிறார்.0 2
கண்ணே உன்னைக் காணக் கருதி என்நெஞ்சம்
எண்ணே நின்று இயம்பும் கொண்ட சிந்தையதாய்
விண்ணோர் முனிவர்க்கு என்றும் காண்பு அரியாயை
நண்ணாது ஒழியேன் என்று நான் அழைப்பேனே – -9-4-2
கண்ணே,Kanne - எனக்குக் கண்ணாளவனே
என் நெஞ்சம்,En nenjam - எனது நெஞ்சானது
உன்னைகாண கருதி,Unnaik kaana karuthi - உன்னையே காண வாசைப்பட்டு
எண்ணே கொண்ட சிந்தையது ஆய் என்று,Ennae konda sinthaiyadhu aai endru - பல பல மநோரதங்களைப் பண்ணி நின்று
இயம்பும்,Iyambum - அலற்றா நிற்கும்
நான்,Naan - நானோ வென்னில்
விண்ணோர்,Vinnor - தேவர்களுக்கும் முனிவர்களுக்கும்
என்றும் காண்பு,Endrum kaanbu - என்றும் காணவரியளன உன்னை அரியாயை
கண்ணா தொழியேன் என்று அழைப்பன்,Kannaa thozhiyen endru azhaippan - கிட்டாமல் விடுவதில்லை யென்று உறுதி கொண்டு கூப்பிடா நின்றேன்.