| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 3591 | திருவாய்மொழி || (9-4–மையார் கருங்கண்ணி) (எம்பெருமானைக் காண விரும்பி அழைத்து தாம் விரும்பிய வண்ணமே கண்டு மகிழ்ந்தமை கூறல்) (கீழ்ப்பாட்டில் தம்முடைய கண்களுக்குண்டான நசையைப் பேசினார். இப்பாட்டில் தமக்கும் தம்முடைய நெஞ்சுக்குமுண்டான சாபலத்தைச் சொல்லுகிறார்.0 2 | கண்ணே உன்னைக் காணக் கருதி என்நெஞ்சம் எண்ணே நின்று இயம்பும் கொண்ட சிந்தையதாய் விண்ணோர் முனிவர்க்கு என்றும் காண்பு அரியாயை நண்ணாது ஒழியேன் என்று நான் அழைப்பேனே – -9-4-2 | கண்ணே,Kanne - எனக்குக் கண்ணாளவனே என் நெஞ்சம்,En nenjam - எனது நெஞ்சானது உன்னைகாண கருதி,Unnaik kaana karuthi - உன்னையே காண வாசைப்பட்டு எண்ணே கொண்ட சிந்தையது ஆய் என்று,Ennae konda sinthaiyadhu aai endru - பல பல மநோரதங்களைப் பண்ணி நின்று இயம்பும்,Iyambum - அலற்றா நிற்கும் நான்,Naan - நானோ வென்னில் விண்ணோர்,Vinnor - தேவர்களுக்கும் முனிவர்களுக்கும் என்றும் காண்பு,Endrum kaanbu - என்றும் காணவரியளன உன்னை அரியாயை கண்ணா தொழியேன் என்று அழைப்பன்,Kannaa thozhiyen endru azhaippan - கிட்டாமல் விடுவதில்லை யென்று உறுதி கொண்டு கூப்பிடா நின்றேன். |