| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 3592 | திருவாய்மொழி || (9-4–மையார் கருங்கண்ணி) (எம்பெருமானைக் காண விரும்பி அழைத்து தாம் விரும்பிய வண்ணமே கண்டு மகிழ்ந்தமை கூறல்) (கீழ்ப்பாட்டிற்படியே கூப்பிடச் செய்தேயும் அவன் வந்தருளக் காணாமையாலே, ஆர்த்தியே செப்பேடாக வந்து ரக்ஷிக்குமவனான உன்னுடைய திருவருளுக்கு நான் புறம்பானேனோ? என்கிறார்.) 3 | அழைக்கின்ற அடி நாயேன் நாய் கூழை வாலால் குழைக்கின்றது போல் என் உள்ளம் குழையும் மழைக்கு அன்று குன்றம் எடுத்து ஆநிரை காத்தாய் பிழைக்கின்றது அருள் என்று பேதுறுவனே–9-4-3 | அழைக்கின்ற அடி நாயேன் என் உள்ளம்,Azhaikkindra adi naayen en ullam - கூப்பிடா நின்றுள்ளவனாய்த் திருவடிவாரத்தில் விழுந்து கிடக்கும் நீசனாள என்னுடைய உள்ளமானது. என் கூழை லாலால் குழைக்கின்றது போல குழையும்,En koozhai laalal kuzhaiykinradhupola kuzhaikkum - நாயானது குட்டை வாலையசைத்து தன்னினைவைக் காட்டுமாபோலே காட்டா நின்றது. அன்று,Andru - முன்பொரு காலத்தில் மழைக்கு குன்றம் எடுத்து,Mazhaikku kunram eduthu - பெருமழையைத் தடுக்கக் கோவர்த்தன மலையைக் குடையாக வெடுத்து ஆ நிரை காலத்தாய்,Aa nirai kaalatthaa - பசுக் கூட்டங்களை ரக்ஷித்தவனே! அருள் பிழைக்கின்றது என்று,Arul pizhaikkindradhu endru - உன்னருள் (என்பக்கலிலே) தடுமாறிப் போகின்றதேயென்று பேது உறுவன்,Paedu uruvan - கலங்கா நின்றேன். |