| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 3593 | திருவாய்மொழி || (9-4–மையார் கருங்கண்ணி) (எம்பெருமானைக் காண விரும்பி அழைத்து தாம் விரும்பிய வண்ணமே கண்டு மகிழ்ந்தமை கூறல்) (தமக்குண்டான வொரு கலக்கத்தை விண்ணப்பஞ் செய்கிறார்.) 4 | உறுவது இது என்று உனக்கு ஆட்பட்டு நின் கண் பெறுவது எது கொல் என்று பேதையேன் நெஞ்சம் மறுகல் செய்யும் வானவர் தானவர்க்கு என்றும் அறிவது அரிய அரியாய அம்மானே–9-4-4 | வானவர் தானவர்க்கு,Vaanavar thaanavarkku - அதுஉலர்க்கும் பிரதி கூலர்க்கும் வாசியற என்றும் அறிவது அரிய,Endrum arivadhu ariya - எப்போதும் அறிய வொண்ணாத அரிய ஆய அம்மானே,Ariya aaya ammaane - நரஸிம்ஹ மூர்த்தியே இனி உறுவது என்று,Ini uruvadhu endru - ‘இதுதான் ஸ்வரூபா நுரூபம்’ என்றறுதி யிட்டு உனக்கு ஆள்பட்டு,Unakku aalpattu - உனக்கு சேஷ பூதனாகி நின் கண் பெறுவது எது கொல் என்று,Nin kan peruvathu edhu kol endru - உன் பக்கலில் நான் பெறக் கூடிய பேறு எதுவோவென்று [நித்ய கைங்கரியமோ அல்லது ஸம்ஸார்க்த்தானோ வென்று] பேதையேன் நெஞ்சம்,Paethaiyen nenjam - அறிவிலியான என்னுடைய நெஞ்சானது மறுகல் செய்யும்,Marugal seiyyum - கலங்கா நின்றது |