| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 3594 | திருவாய்மொழி || (9-4–மையார் கருங்கண்ணி) (எம்பெருமானைக் காண விரும்பி அழைத்து தாம் விரும்பிய வண்ணமே கண்டு மகிழ்ந்தமை கூறல்) (ஆழ்வார்தாம் தம்முடைய கலக்கத்தைக் கீழ்ப்பாட்டில் வெளியிட்டவாறே எம்பெருமான் ஆழ்வீர்! நாம் சிலர்க்கு அருமைப்பட்டிருக்கிறோமென்பது கிடக்கட்டும் ; பத்துடையடியவர்க்கு எளிவன் என்பதை நீர் ஆதியிலேயே அறிந்து பேசினவரல்லீரோ? நான் பிறர்க்கு அரியனாயிருப்பது கொண்டு உமக்கென்ன வருத்தம்? உமக்கு எளியனே காணும் உமக்கு வேண்டுவதென்ன? அதைச்சொல்லும் என்றருளிச்செய்ய காண்கைதான் வேணுமென்கிறார்.) 5 | அரியாய அம்மானை அமரர் பிரானைப் பெரியானைப் பிரமனை முன் படைத்தானை வரி வாள் அரவின் அணைப் பள்ளி கொள்கின்ற கரியான் கழல் காணக் கருதும் கருத்தே–9-4-5 | அரி ஆய அம்மானை,Ari aaya ammaanaai - விரோதி நிஸந சீலனான ஸ்வாமியாய் அமரர் பிரானை,Amarar piraanai - நித்ய ஸுரிகளுக்கு அநுபாவ்யனாய் பெரியாணை,Periyaanai - அந்த நித்ய ஸுரிகளுக்கும் பரிச்சேதிக்க வொண்ணாதபெருமையை யுடையவனாய் முன் பிரமனை படைத்தானை,Mun piramanai padaiththaanai - முன்னம் நான்முகளை (உந்திக்கமலத்தில்) தோற்றுவித்தவனாய் வரிவாள் அரவு இன் அணை பள்ளி கொள்கின்ற,Varivaal aravu in anai palli kolkinra - அழகிய ஆதிசேக்ஷனாகிற பரமபோக்ய சயனத்திலே திருக்கண் வளர்ந்தருள்பவனான கரியான்,Kariyaan - கரிய பிரானுடைய சுழல் காண,Suzal kaana - திருவடிகளைக் காண்பதற்கு கருத்து கருதும்,Karuthu karuthum - என்னுள்ளம் கருதா நின்றது. |