| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 3595 | திருவாய்மொழி || (9-4–மையார் கருங்கண்ணி) (எம்பெருமானைக் காண விரும்பி அழைத்து தாம் விரும்பிய வண்ணமே கண்டு மகிழ்ந்தமை கூறல்) (கீழ் ஐந்து பாட்டுக்களாலும் ஆழ்வார் வெளியிட்ட ஆர்த்தியைக் கண்ட எம்பெருமான் ஒருவாறு இவருடைய ஆர்த்தியைத் தீர்ப்போமென்று திருவுள்ளம் பற்றி ஆழ்வாருடைய திருவுள்ளத்திலே வந்து புகுந்தான்; அவ்வளவிலே தம்முடைய நெஞ்சு உகந்து அநுபவிக்கிறபடியைப் பேசுகிறாரிதில்.) 6 | கருத்தே உன்னைக் காண கருதி என் நெஞ்சத்து இருத்தாக இருத்தினேன் தேவர்கட்கு எல்லாம் விருத்தா விளங்கும் சுடர் சோதி உயரத்து ஒருத்தா உன்னை உள்ளும் என் உள்ளம் உகந்தே –9-4-6 | கருத்தே,Karuththe - என் கருத்தாக வுள்ள பெருமானே! உன்னை காணகருதி,Unnai kaana karuthi - உன்னைக் கண்டநுபவிக்க வேணுமென்று மநோரதங் கொண்டு என் நெஞ்சத்து,En nenchaththu - எழுந்திராத ஸ்திரப்ரதிஷ்டையாக இருத்தினேன்,Iruththinaen - இருத்திக் கொண்டேன் தேவர்கட்கு எல்லாம் விருத்தா,Thevargatku ellam viruththaa - உயர்ந்தவர்களுக் கெல்லாம் உயர்ந்தவனே விளங்கும் சுடர் சோதி உயரத்து,Vilangum sudar sothi uyarathu - அளவு கடந்த தேஜோமயமான உயர்ந்த நிலத்திலே(பரம பதத்திலே) ஒருத்தா,Oruththaa - அத்விதீயனாய் எழுந்தருளியிருப்பவனே என் உள்ளம்,En ullam - எனது நெஞ்சானது உன்னை உகந்து உள்ளும்,Unnai ugandhu ullum - உன்னை ப்ரேமத்தோடு சிந்தனை செய்யா நின்றது. |