| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 3596 | திருவாய்மொழி || (9-4–மையார் கருங்கண்ணி) (எம்பெருமானைக் காண விரும்பி அழைத்து தாம் விரும்பிய வண்ணமே கண்டு மகிழ்ந்தமை கூறல்) (ஒரு கால் தூணிலே வந்து தோன்றி ப்ரஹலாதாழ்வானுடைய ஆர்த்தியைத் தீர்த்தாப்போலே தம்முடைய ஆர்த்தியைத் தீர்த்தருவினதாக நினைத்து ஏத்துகிறார். “என்னுள்ளம் உன்னை உகந்தேயுள்ளும்” என்று கீழ்ப்பாட்டிற் பேசினவதுவே இப்பாட்டிலும் முக்கியமாகப் பேசப்படுகிறது.) 7 | உகந்தே யுன்னை உள்ளும் என்னுள்ளத்து அகம்பால் அகந்தான் அமர்ந்தே யிடங்கொண்ட வமலா மிகுந்தானவன் மார்வகலம் இரு கூறா நகந்தாய் நரசிங்கமதாய வுருவே–9-4-7 | அகம் நான் ஏமர்ந்து,Akam naan emarnthu - உள்ளே பொருந்தி இடம் கொண்ட அமலா,Idam konda amala - இடங்கொண்டிருக்கின்ற அமலனே மிரும் தானவன் மார்வு அகலம்,Mirum thaanavan maarvu akalam - மிடுக்குமிக்க இரணியாசுரனுடைய அகன்ற மார்வை இருகூறு ஆ,Irukooru aa - இருபிளவாக்கவல்ல நகந்தாய்,Nagandhai - நகத்தை யுடையவனே நரசிங்கம் அது ஆய உருவே,Narasingam adhu aaya uruve - நரசிங்க மூர்த்தியானவனே என் உள்ளத்து அகம்பால்,En ullaththu akambaale - எனது ஹருதயத்தின் மர்ம ஸ்தானமானது உன்னை உகந்தே உள்ளும்,Unnai ugandhe ullum - உன்னைப் பரமப்ரீதியோடு அநுபவிக்கின்றது. |