Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 3597 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
3597திருவாய்மொழி || (9-4–மையார் கருங்கண்ணி) (எம்பெருமானைக் காண விரும்பி அழைத்து தாம் விரும்பிய வண்ணமே கண்டு மகிழ்ந்தமை கூறல்) (கீழிரண்டு பாட்டுக்களிலுண்டான களிப்பே இப்பாட்டிலும் தொடர்ந்து செல்லுகின்றது. ஸ்ரீ ஒன்பதினாயிரப்படி –எம்பெருமானைக்-கிருஷ்ணனைக் – காணப் பெற்றேன் என்று இனியராகிறார்.) 8
உருவாகிய ஆறு சமயங்கட்கு எல்லாம்
பொருவாகி நின்றான் அவன் எல்லாப் பொருட்கும்
அருவாகிய வாதியைத் தேவர்கட்கு எல்லாம்
கருவாகிய கண்ணனைக் கண்டு கொண்டேனே–9-4-8
உரு ஆகிய,Uru aagiya - மேலெழுந்த பார்வையில் ஒன்று போலே தோற்றுகிற
ஆறு சமயங்கட்கு,Aaru samayangadku - புறமதங்களான அறு சமயங்களுக்கும் எல்லாம்
பொரு ஆகி நின்றான் அவன்,Poru aagi ninraan avaan - தடையாகி நிற்பவனும்
எல்லா பொருட்கும் அரு ஆகிய ஆகியை,Ellaa porutkum aru aagiya aakiyai - ஸகல பதார்த்தங்களுக்கும் உயிர் நிலையாய்க் கொண்டு முதல்வனும்
தேவர்கட்கு எல்லாம் கரு ஆகிய,Thevargatku ellam karu aagiya - எல்லாத் தேவர்களுக்கும் காரண பூதனாமான
கண்ணனை,Kannanaik - கண்ணபிரானை
கண்டு கொண்டேன்,Kandu kondaen - கண்டு அநுபவிக்கப் பெற்றேன்.