Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 3598 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
3598திருவாய்மொழி || (9-4–மையார் கருங்கண்ணி) (எம்பெருமானைக் காண விரும்பி அழைத்து தாம் விரும்பிய வண்ணமே கண்டு மகிழ்ந்தமை கூறல்) (தரம் அநுபவித்து ஆனந்திப்பதிற்காட்டிலும் பிறரையும் அநுபவிப்பித்து ஆனந்திருப்பது ஒப்புயர்வற்ற ஆனந்தமாதலால் அவ்வானந்தமும் தமக்கு ப்ராப்தமானபடியை இப்பாட்டிலருளிச் செய்கிறார்.) 9
கண்டு கொண்டு என் கண்ணினை ஆரக் களித்து
பண்டை வினை ஆயின பற்றோடு அறுத்துத்
தொண்டர்க்கு அமுது உண்ணச் சொன்மாலைகள் சொன்னேன்
அண்டத்து அமரர் பெருமான் அடியேனே –9-4-9
எண்கண் இணை ஆர கண்டு கொண்டு,Enkan inai aara kandu konda - என் கண்களிரண்டும் வயிறு நிறையும் படி கண்டு கொண்டு
களித்து,Kaliththu - ஆனந்தித்து
பண்டை வினை ஆயின,Pandai vinai aayina - அநாதி விரோதிகளான எல்லாவற்றையும்
பற்றோடு அறுத்து,Patroadu aruththu - வாஸனையோடே போக்கி
அண்டத்து அமரர் பெருமான் அடியேன்,Andaththu amarar perumaan adiyaen - நித்யஸுரி நாதனுக்கு அடியேனான நான்
தொண்டர்க்கு அமுது உண்ண,Thondarkku amudhu unna - பக்தாம்ருதமாக
சொல் மாலைகள் சொன்னேன்,Sol maalaihal sonnaen - இத்திருவாய்மொழியை விண்ணப்பஞ் செய்யப்பெற்றேன்.