| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 3598 | திருவாய்மொழி || (9-4–மையார் கருங்கண்ணி) (எம்பெருமானைக் காண விரும்பி அழைத்து தாம் விரும்பிய வண்ணமே கண்டு மகிழ்ந்தமை கூறல்) (தரம் அநுபவித்து ஆனந்திப்பதிற்காட்டிலும் பிறரையும் அநுபவிப்பித்து ஆனந்திருப்பது ஒப்புயர்வற்ற ஆனந்தமாதலால் அவ்வானந்தமும் தமக்கு ப்ராப்தமானபடியை இப்பாட்டிலருளிச் செய்கிறார்.) 9 | கண்டு கொண்டு என் கண்ணினை ஆரக் களித்து பண்டை வினை ஆயின பற்றோடு அறுத்துத் தொண்டர்க்கு அமுது உண்ணச் சொன்மாலைகள் சொன்னேன் அண்டத்து அமரர் பெருமான் அடியேனே –9-4-9 | எண்கண் இணை ஆர கண்டு கொண்டு,Enkan inai aara kandu konda - என் கண்களிரண்டும் வயிறு நிறையும் படி கண்டு கொண்டு களித்து,Kaliththu - ஆனந்தித்து பண்டை வினை ஆயின,Pandai vinai aayina - அநாதி விரோதிகளான எல்லாவற்றையும் பற்றோடு அறுத்து,Patroadu aruththu - வாஸனையோடே போக்கி அண்டத்து அமரர் பெருமான் அடியேன்,Andaththu amarar perumaan adiyaen - நித்யஸுரி நாதனுக்கு அடியேனான நான் தொண்டர்க்கு அமுது உண்ண,Thondarkku amudhu unna - பக்தாம்ருதமாக சொல் மாலைகள் சொன்னேன்,Sol maalaihal sonnaen - இத்திருவாய்மொழியை விண்ணப்பஞ் செய்யப்பெற்றேன். |