Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 3599 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
3599திருவாய்மொழி || (9-4–மையார் கருங்கண்ணி) (எம்பெருமானைக் காண விரும்பி அழைத்து தாம் விரும்பிய வண்ணமே கண்டு மகிழ்ந்தமை கூறல்) (தாம் உஜ்ஜீவிக்கப்பெற்ற படியைப் பேரானந்தம் பொலியப் பேசுகிறார்.) 10
அடியான் இவன் என்று எனக்கு ஆர் அருள் செய்யும்
நெடியானை நிறை புகழ் அம் சிறைப் புள்ளின்
கொடியானைக் குன்றாமல் உலகம் அளந்த
அடியானை அடைந்து அடியேன் உய்ந்தவாறே–9-4-10
இவன் அடியான் என்று,Evan adiyaan endru - இச்சடகோபன் நமக்கு அடிமைப்பட்டவன் என்று கொண்டு
எனக்கு ஆர் அருள் செய்யும் செடியானை,Enakku aar arul seyyum chediyanaai - என் விஷயத்தில் பேரருள் புரியும் ஸர்வேச்வரனாய்
நிறை புகழ் அம்சிறை புள்ளின் கொடியானை,Nirai pugazh amsirai pullin kodiyanaai - நிறைந்த புகழோடுகூடி அழகிய சிறகையுடைய கருடனைக் கொடியாகவுடையனாய்
குன்றாமல் உலகம் அளந்த அடியானை,Kunraamal ulagam alandha adiyaanai - ஒன்றுவிடாமல் உலகம் முழுவதையுமளந்து கொண்ட திருவடியையுடையனாயிருக்கு மெம்பெருமானை
அடியேன் அடைந்து உய்ந்த ஆறே,Adiyaen adaindhu uyndha aare - அடியேன் கிட்டி உஜ்ஜீவிக்கப் பெற்ற விதம் என்னே!