| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 3599 | திருவாய்மொழி || (9-4–மையார் கருங்கண்ணி) (எம்பெருமானைக் காண விரும்பி அழைத்து தாம் விரும்பிய வண்ணமே கண்டு மகிழ்ந்தமை கூறல்) (தாம் உஜ்ஜீவிக்கப்பெற்ற படியைப் பேரானந்தம் பொலியப் பேசுகிறார்.) 10 | அடியான் இவன் என்று எனக்கு ஆர் அருள் செய்யும் நெடியானை நிறை புகழ் அம் சிறைப் புள்ளின் கொடியானைக் குன்றாமல் உலகம் அளந்த அடியானை அடைந்து அடியேன் உய்ந்தவாறே–9-4-10 | இவன் அடியான் என்று,Evan adiyaan endru - இச்சடகோபன் நமக்கு அடிமைப்பட்டவன் என்று கொண்டு எனக்கு ஆர் அருள் செய்யும் செடியானை,Enakku aar arul seyyum chediyanaai - என் விஷயத்தில் பேரருள் புரியும் ஸர்வேச்வரனாய் நிறை புகழ் அம்சிறை புள்ளின் கொடியானை,Nirai pugazh amsirai pullin kodiyanaai - நிறைந்த புகழோடுகூடி அழகிய சிறகையுடைய கருடனைக் கொடியாகவுடையனாய் குன்றாமல் உலகம் அளந்த அடியானை,Kunraamal ulagam alandha adiyaanai - ஒன்றுவிடாமல் உலகம் முழுவதையுமளந்து கொண்ட திருவடியையுடையனாயிருக்கு மெம்பெருமானை அடியேன் அடைந்து உய்ந்த ஆறே,Adiyaen adaindhu uyndha aare - அடியேன் கிட்டி உஜ்ஜீவிக்கப் பெற்ற விதம் என்னே! |