Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 3600 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
3600திருவாய்மொழி || (9-4–மையார் கருங்கண்ணி) (எம்பெருமானைக் காண விரும்பி அழைத்து தாம் விரும்பிய வண்ணமே கண்டு மகிழ்ந்தமை கூறல்) (இப்பதிகம் வானவர்தமின்னுயிர்க்கு ஏறேதருமென்று பயனுரைத்துத் தலைக்கட்டுகிறார்.) 11
ஆறா மதயானை அடர்த்தவன் தன்னைச்
சேறு ஆர் வயல் தென் குருகூர் சடகோபன்
நூறே சொன்ன ஓர் ஆயிரத்துள் இப்பத்தும்
ஏறே தரும் வானவர் தம் இன்னுயிர்க்கே–9-4-11
ஆறாமதம் யானை,Aaraamadam yaanai - ஒரு நாளும் மாறாத மதத்தையுடைய குவலயாபீட யானையை
அடர்த்தவன் தன்னை,Adarththavan thannai - பங்கப்படுத்தின பெருமானைக் குறித்து
சேறு ஆர் அயல் குருகூர் சடகோபன்,Seru aar ayal kurukoor sadagopan - சேறு மிக்க வயலை யுடைத்தான தென் குருகூர்க்குத் தலைவரான ஆழ்வார்
நூறே சொன்ன,Noorai sonna - நூறு நூறாக வருளிச் செய்த
ஓர் ஆயிரத்துள் இப்பத்தும்,Or aayiraththul ippaththum - ஆயிரத்தினுள்ளே இப்பதிகமானது
வானவர் தம் இன் உயிர்க்கு ஏறு,Vaanavar tham in uyirkkum eeru - நித்ய ஸுரிகளின் இன்னுயிர்த் தலைவனான எம்பெருமானை
தரும்,Tharum - கொடுக்கும் (பகவத் ப்ராப்தியைப் பண்ணித்தருமென்றபடி)