| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 3600 | திருவாய்மொழி || (9-4–மையார் கருங்கண்ணி) (எம்பெருமானைக் காண விரும்பி அழைத்து தாம் விரும்பிய வண்ணமே கண்டு மகிழ்ந்தமை கூறல்) (இப்பதிகம் வானவர்தமின்னுயிர்க்கு ஏறேதருமென்று பயனுரைத்துத் தலைக்கட்டுகிறார்.) 11 | ஆறா மதயானை அடர்த்தவன் தன்னைச் சேறு ஆர் வயல் தென் குருகூர் சடகோபன் நூறே சொன்ன ஓர் ஆயிரத்துள் இப்பத்தும் ஏறே தரும் வானவர் தம் இன்னுயிர்க்கே–9-4-11 | ஆறாமதம் யானை,Aaraamadam yaanai - ஒரு நாளும் மாறாத மதத்தையுடைய குவலயாபீட யானையை அடர்த்தவன் தன்னை,Adarththavan thannai - பங்கப்படுத்தின பெருமானைக் குறித்து சேறு ஆர் அயல் குருகூர் சடகோபன்,Seru aar ayal kurukoor sadagopan - சேறு மிக்க வயலை யுடைத்தான தென் குருகூர்க்குத் தலைவரான ஆழ்வார் நூறே சொன்ன,Noorai sonna - நூறு நூறாக வருளிச் செய்த ஓர் ஆயிரத்துள் இப்பத்தும்,Or aayiraththul ippaththum - ஆயிரத்தினுள்ளே இப்பதிகமானது வானவர் தம் இன் உயிர்க்கு ஏறு,Vaanavar tham in uyirkkum eeru - நித்ய ஸுரிகளின் இன்னுயிர்த் தலைவனான எம்பெருமானை தரும்,Tharum - கொடுக்கும் (பகவத் ப்ராப்தியைப் பண்ணித்தருமென்றபடி) |