Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 3602 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
3602திருவாய்மொழி || (9-5–இன்னுயிர்ச் சேவலும்) (தலைவனைக் காண ஆசையுற்ற தலைவி அவனை நினைவூட்டும் பொருள்களால் தளர்ந்தமை கூறல்) (சிலஅன்றிற் பேடைகளை நோக்கி நீங்கள் உங்களுடைய ஆண்களோடே கூடிக்கொண்டு இனிமையான கூஜிதங்களைச் செய்து அதனாலே என்னை நலிகின்றீர்களே இது நியாயமா? இப்படி நலிய வேண்டா–என்று இரக்கிறாள்.) 2
இத்தனை வேண்டுவது அன்று அந்தோ
அன்றில் பேடைகாள்
எத்தனை நீரும் உன் சேவலும்
கரைந்து ஏங்குதீர்
வித்தகன் கோவிந்தன் மெய்யன்
அல்லன் ஒருவர்க்கும்
அத்தனை ஆம் இனி என் உயிர்
அவன் கையதே–9-5-2
அன்றில்பேடைகாள்,Andril paedaikhaal - பெண்ணன்றிற் பறவைகளே
நீரும் நும் சேவலும்,Neerum num sevavalum - நீங்களும் உங்கள் சேவல்களும்
எத்தனை கரைந்து ஏங்குதிர்,Eththanai karaindhu aenguthir - எவ்வளவோ கரைந்து உருந்துகிறீர்களே
இத்தனை வேண்டுவது அன்று,Ithanai venduvathu andru - என்னைக் கொலை செய்ய இத்தனைபாரிப்பு வேண்டியதில்லை!;
அந்தோ,Andho - ஐயோ, எதுக்கு இவ்வளவு பாரிப்பு?
வித்தகன் கோவிந்தன்,Viththagan Govndhan - மாயக் கோபாலன்
ஒருவர்க்கும் மெய்யன் அல்லன்,Oruvarkkum meyyan allan - நல்லார் தீயாரென்கிற வாசியின்றிக்கே அனைவர்க்கும் பொய்யனே
இனி,Ini - ஆன பின்பு
என் உயிர்,En uyir - என் பிராணன்
அவன் கையதே ஆம் அத்தனை,Avan kaiyadhai aam aththanai - அவன் கைப்பட்டதேயன்றோ.