| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 3602 | திருவாய்மொழி || (9-5–இன்னுயிர்ச் சேவலும்) (தலைவனைக் காண ஆசையுற்ற தலைவி அவனை நினைவூட்டும் பொருள்களால் தளர்ந்தமை கூறல்) (சிலஅன்றிற் பேடைகளை நோக்கி நீங்கள் உங்களுடைய ஆண்களோடே கூடிக்கொண்டு இனிமையான கூஜிதங்களைச் செய்து அதனாலே என்னை நலிகின்றீர்களே இது நியாயமா? இப்படி நலிய வேண்டா–என்று இரக்கிறாள்.) 2 | இத்தனை வேண்டுவது அன்று அந்தோ அன்றில் பேடைகாள் எத்தனை நீரும் உன் சேவலும் கரைந்து ஏங்குதீர் வித்தகன் கோவிந்தன் மெய்யன் அல்லன் ஒருவர்க்கும் அத்தனை ஆம் இனி என் உயிர் அவன் கையதே–9-5-2 | அன்றில்பேடைகாள்,Andril paedaikhaal - பெண்ணன்றிற் பறவைகளே நீரும் நும் சேவலும்,Neerum num sevavalum - நீங்களும் உங்கள் சேவல்களும் எத்தனை கரைந்து ஏங்குதிர்,Eththanai karaindhu aenguthir - எவ்வளவோ கரைந்து உருந்துகிறீர்களே இத்தனை வேண்டுவது அன்று,Ithanai venduvathu andru - என்னைக் கொலை செய்ய இத்தனைபாரிப்பு வேண்டியதில்லை!; அந்தோ,Andho - ஐயோ, எதுக்கு இவ்வளவு பாரிப்பு? வித்தகன் கோவிந்தன்,Viththagan Govndhan - மாயக் கோபாலன் ஒருவர்க்கும் மெய்யன் அல்லன்,Oruvarkkum meyyan allan - நல்லார் தீயாரென்கிற வாசியின்றிக்கே அனைவர்க்கும் பொய்யனே இனி,Ini - ஆன பின்பு என் உயிர்,En uyir - என் பிராணன் அவன் கையதே ஆம் அத்தனை,Avan kaiyadhai aam aththanai - அவன் கைப்பட்டதேயன்றோ. |