| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 3603 | திருவாய்மொழி || (9-5–இன்னுயிர்ச் சேவலும்) (தலைவனைக் காண ஆசையுற்ற தலைவி அவனை நினைவூட்டும் பொருள்களால் தளர்ந்தமை கூறல்) (ஸ்ரீ ஒன்பதினாயிரப்படி –அற நோவு பட்ட என்னை நலியாதே கொள்ளுங்கோள்என்று அன்றில் பேடைகளை திரியவும் மீளவும் இரக்கிறாள்.) 3 | அவன் கையதே என் ஆர் உயிர் அன்றில் பேடைகாள் எவன் சொல்லி நீர் குடைந்து ஆடுதிர் புடை சூழவே தவம் செய்தில்லா வினையாட்டியேன் உயிர் இங்கு உண்டோ எவன் சொல்லி நிற்றும் நும் ஏங்கு கூக்குரல் கேட்டுமே–9-5-3 | அன்றில் பேடைகாள்,Anril pedaikal - பெண்ணன்றில் பறவைகளே எனது ஆர் உயிர் அவன் கையுதே,Enathu ar uyir avan kaiyuthe - எனது அருமையானவுயீர் அவன் கைப்பட்டதே நீர் எவம் சொல்லி,Neer evam solli - நீங்கள் ஏதேதோ உக்திகளைப் பேசிக் கொண்டு குடைந்து,Kudainthu - ஸம்ச்லேஷித்து புடை சூழவே ஆடுதிர்,Pudai soolave aaduthir - என் கண் வட்டத்திலேயே திரிகின்றீர்கள்; தவம் செய்தில்லா,Thavam seidhu illaa - அவனைப்போலே பிரிவுக்கு ஆறியிருக்கும்படியான பாக்கியம் பண்ணாத இங்கு உண்டோ,Ingu undoo - (அங்கே போனபடியாலே) இங்கு இல்லையே நும் எங்கு கூக்குரல் கேட்டும்,Num engu kookkural keettum - உங்களுடைய பரேம கனமான தொனியைக் கேட்டும் எவம் சொல்லி,Evam solli - எத்தைச் சொல்லித் தரிப்பது? நிற்றும் |