Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 3603 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
3603திருவாய்மொழி || (9-5–இன்னுயிர்ச் சேவலும்) (தலைவனைக் காண ஆசையுற்ற தலைவி அவனை நினைவூட்டும் பொருள்களால் தளர்ந்தமை கூறல்) (ஸ்ரீ ஒன்பதினாயிரப்படி –அற நோவு பட்ட என்னை நலியாதே கொள்ளுங்கோள்என்று அன்றில் பேடைகளை திரியவும் மீளவும் இரக்கிறாள்.) 3
அவன் கையதே என் ஆர் உயிர் அன்றில் பேடைகாள்
எவன் சொல்லி நீர் குடைந்து ஆடுதிர் புடை சூழவே
தவம் செய்தில்லா வினையாட்டியேன் உயிர் இங்கு உண்டோ
எவன் சொல்லி நிற்றும் நும் ஏங்கு கூக்குரல் கேட்டுமே–9-5-3
அன்றில் பேடைகாள்,Anril pedaikal - பெண்ணன்றில் பறவைகளே
எனது ஆர் உயிர் அவன் கையுதே,Enathu ar uyir avan kaiyuthe - எனது அருமையானவுயீர் அவன் கைப்பட்டதே
நீர் எவம் சொல்லி,Neer evam solli - நீங்கள் ஏதேதோ உக்திகளைப் பேசிக் கொண்டு
குடைந்து,Kudainthu - ஸம்ச்லேஷித்து
புடை சூழவே ஆடுதிர்,Pudai soolave aaduthir - என் கண் வட்டத்திலேயே திரிகின்றீர்கள்;
தவம் செய்தில்லா,Thavam seidhu illaa - அவனைப்போலே பிரிவுக்கு ஆறியிருக்கும்படியான பாக்கியம் பண்ணாத
இங்கு உண்டோ,Ingu undoo - (அங்கே போனபடியாலே) இங்கு இல்லையே
நும் எங்கு கூக்குரல் கேட்டும்,Num engu kookkural keettum - உங்களுடைய பரேம கனமான தொனியைக் கேட்டும்
எவம் சொல்லி,Evam solli - எத்தைச் சொல்லித் தரிப்பது? நிற்றும்