| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 3604 | திருவாய்மொழி || (9-5–இன்னுயிர்ச் சேவலும்) (தலைவனைக் காண ஆசையுற்ற தலைவி அவனை நினைவூட்டும் பொருள்களால் தளர்ந்தமை கூறல்) (சில மயில்களை குறித்து, நீங்கள் உயரக்கூவி என்னுயிரை முடிக்கப் பார்க்கிறீர்களே! இது நீதியோ வென்கிறாள்.) 4 | கூக்குரல் கேட்டும் நம் கண்ணன் மாயன் வெளிப்படான் மேற் கிளை கொள்ளேன் மின் நீரும் சேவலும் கோழி காள் வாக்கும் மனமும் கருமமும் நமக்கு ஆங்கு அதே ஆக்கையும் ஆவியும் அந்தரம் நின்று உழலுமே–9-5-4 | கோழிகாள்,Kozhikal - மயில்களே! கூக்குரல் கேட்டும்,Kookkural keettum - நீங்கள் பாஸ்பரம் அழைத்துக் கொள்ளுகிற தொனியைக் கேட்டும் நம் மாயன் கண்ணன்,Nam maayan kannan - நமது மாயக்கண்ணன் வெளிப்படான்,Velippadaan - வந்து தோன்றுகின்றவன் நீரும் சேவலும் மேல் கிளை கொள்ளேன் மின்,Neerum sevalum mel kilai kollen min - நீங்கள் ஆணும் பெண்ணுமாயிருந்து உயரக் கூவ வேண்டா நமக்கு,Namakku - என்னுடைய வாக்கும் மனமும் கருமமும்,Vaakkum manamum karumamum - காணத்ரய வ்ருத்தியும் ஆங்கதே,Aangathe - அப்பெருமான் பக்கலிலே யாயிற்று ஆக்கையும் ஆவியும்,Aakkaiyum aaviyum - உடலும் உயிரும் அந்தரம் நின்று உழலும்,Antharam ninru uzhalum - நடுவே நின்று தத்தளிக்கின்றன |