திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 3604 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
3604திருவாய்மொழி || (9-5–இன்னுயிர்ச் சேவலும்) (தலைவனைக் காண ஆசையுற்ற தலைவி அவனை நினைவூட்டும் பொருள்களால் தளர்ந்தமை கூறல்) (சில மயில்களை குறித்து, நீங்கள் உயரக்கூவி என்னுயிரை முடிக்கப் பார்க்கிறீர்களே! இது நீதியோ வென்கிறாள்.) 4
கூக்குரல் கேட்டும் நம் கண்ணன் மாயன் வெளிப்படான் மேற் கிளை கொள்ளேன் மின் நீரும் சேவலும் கோழி காள் வாக்கும் மனமும் கருமமும் நமக்கு ஆங்கு அதே ஆக்கையும் ஆவியும் அந்தரம் நின்று உழலுமே–9-5-4
பதவுரை Show / Hide
கோழிகாள்,Kozhikal - மயில்களே!
கூக்குரல் கேட்டும்,Kookkural keettum - நீங்கள் பாஸ்பரம் அழைத்துக் கொள்ளுகிற தொனியைக் கேட்டும்
நம் மாயன் கண்ணன்,Nam maayan kannan - நமது மாயக்கண்ணன்
வெளிப்படான்,Velippadaan - வந்து தோன்றுகின்றவன்
நீரும் சேவலும் மேல் கிளை கொள்ளேன் மின்,Neerum sevalum mel kilai kollen min - நீங்கள் ஆணும் பெண்ணுமாயிருந்து உயரக் கூவ வேண்டா
நமக்கு,Namakku - என்னுடைய
வாக்கும் மனமும் கருமமும்,Vaakkum manamum karumamum - காணத்ரய வ்ருத்தியும்
ஆங்கதே,Aangathe - அப்பெருமான் பக்கலிலே யாயிற்று
ஆக்கையும் ஆவியும்,Aakkaiyum aaviyum - உடலும் உயிரும்
அந்தரம் நின்று உழலும்,Antharam ninru uzhalum - நடுவே நின்று தத்தளிக்கின்றன