| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 3605 | திருவாய்மொழி || (9-5–இன்னுயிர்ச் சேவலும்) (தலைவனைக் காண ஆசையுற்ற தலைவி அவனை நினைவூட்டும் பொருள்களால் தளர்ந்தமை கூறல்) (ஸ்ரீ ஒன்பதினாயிரப்படி –தன்னினவாய் இருந்து நலிகிற பூவைகளைக் குறித்து -அவன் தான் என்னை முடிக்கைக்கு அழகிதான நல் விரகு பார்த்தான் -உங்களுக்கு இங்கே விஷயம் இல்லை -என்கிறாள்.) 5 | அந்தரம் நின்று உழல்கின்ற யானுடைப் பூவைகாள் நும் திறத்து ஏதும் இடை இல்லை குழறேன்மினோ இந்திர ஞாலங்கள் காட்டி இவ் ஏழ் உலகும் கொண்ட நம் திரு மார்வன் நம் ஆவி உண்ண நன்கு எண்ணினான்–9-5-5 | அந்தரம் நின்று,Antharam ninru - நடுவே வீணாகப் பரிச்சாப்படுகிற உழல்கின்ற யானுடைய பூனவ காள்,Yaanudaiya poonava kaal - என்னுடைய பூவைகளே ! நும் திறந்து எதும் இடை இல்லை,Num thirandhu ethum idai illai - உங்கள் உத்யோகத்திற்குச் சிறிதும் அவகாசமில்லை குழறேன்மின,Kuzhaarenmin - உங்கள் தொனியைக்காட்டி நலி வேண்டா இந்திர ஞாலங்கள் காட்டி,Indhira gnaalangal kaatti - (பண்டுமாவலியிடத்து) மாயா விநோதங்கள் காட்டி இவ் எழ் உலரும் கொண்ட,Iv el ularum konda - இவ்வேழுலகங்களையும் ஆக்ரமித்து கொண்டாடப் போலே என்னையும் கொள்ளை கொண்ட நம் திருமார்பன்,Nam thirumaarban - நமது திருமால் நம் ஆவி உண்ண,Nam aavi unna - நம்மூயிரையும் கொள்ளை கொள்ள நன்கு எண்ணினான்,Nangu enninaan - நன்றாக ஸங்கல்பித்தான் |