| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 3606 | திருவாய்மொழி || (9-5–இன்னுயிர்ச் சேவலும்) (தலைவனைக் காண ஆசையுற்ற தலைவி அவனை நினைவூட்டும் பொருள்களால் தளர்ந்தமை கூறல்) (ஸ்ரீ ஆறாயிரப்படி –அவன் பிரிந்த தசையில் அவன் திரு நாமங்களையும் சொல்லாமைக்கு அன்றோ உன்னை நான் வளர்த்தது – ஆனபின்பு அவன் திரு வடிவு போலே இருக்கும் உன் வடிவைக் காட்டி அதின் மேலே அவன் திரு நாமங்களையும் சொல்லி என்னை நோவு செய்யாதே கொள்ளாய் -என்று தன் கிளியைக் குறித்துச் சொல்லுகிறாள்.) 6 | நன்கு எண்ணி நான் வளர்த்த சிறு கிளிப் பைதலே இன் குரல் நீ மிழற்றேல் என் ஆர் உயிர்க் காகுத்தன் நின் செய்ய வாய் ஒக்கும் வாயன் கண்ணன் கை காலினன் நின் பசுஞ்சாம நிறத்தன் கூட்டு உண்டு நீங்கினான்–9-5-6 | நன்கு எண்ணி,Nangu enni - எனக்கு ஆபத்திலே உதவுவாயென்று நன்மையை நினைத்து நான் வளர்த்த,Naan valartha - நான் போஷித்து வந்த சிறு கிளி பை தலே,Siru kili pai thale - சிறிய கிளிக் குட்டியே! இன் குரல் நீ மிழற்றேல்,In kural nee mizhaarel - இனிய குரலைக் கொண்டு நீ தொனி செய்யாதே (ஏனென்னில்) நின் செய்ய வாய் ஒக்கும் வாயுன்,Nin seiyya vaai okkum vaayun - உனது சிவந்த வாயையொத்த வாயையுடையவனும் கண்ணன் கை காலினன்,Kannan kai kaalinan - (உனது கண் கை காலோடொத்த) திருக்கண் திருக்கை திருவடிகளையிடையவனும் நின் பசும் சாமம் நிறத்தன்,Nin pasum saamam nirathan - உன்னுடைய பசுமை யழியாத சாமநிறம் போன்ற நிறத்தை யுடையனும் என் ஆர் உயிர்,En ar uyir - என்னுடைய அருமையான உயிர் போன்றவனுமான காகுத்தன்,Kaaguthan - இராமபிரான் கூட்டுண்டு நீங்கினான்,Koottundu neenginaan - என்னோடே கலந்துப் பிரிந்தான் |