| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 3607 | திருவாய்மொழி || (9-5–இன்னுயிர்ச் சேவலும்) (தலைவனைக் காண ஆசையுற்ற தலைவி அவனை நினைவூட்டும் பொருள்களால் தளர்ந்தமை கூறல்) (எம்பெருமானது வடிவுக்குப் போலியான மேக பங்க்திகளைக் கண்டு, உங்கள் வடிவைக் காட்டி என்னை முடியாதே கொள்ளுங்கோளென்கிறாள்.) 7 | கூட்டுண்டு நீங்கிய கோலத் தாமரைக் கண் செவ்வாய் வாட்டமில் என் கரு மாணிக்கம் கண்ணன் மாயன் போல் கோட்டிய வில்லோடு மின்னும் மேகக் குழாங்கள் காள் காட்டேன்மின் நும் உரு என் உயிர்க்கு அது காலனே–9-5-7 | கூட்டுண்டு நீங்கிய,Koottundu neengiya - என்னோடு கலந்து பிரிந்த கோலம் தாமரை கண் செம்வாய்,Kolam thaamarai kan semvaai - அழகிய தாமரை போன்ற கண்களையும் சிவந்த அதாத்தையு முடையனாய் வாட்டம் இல் என் கரு மாணிக்கம்,Vaattam il en karu maanikam - இடைவிடாமல் என்னினைவிலேயேயிருக்கிற நீலரத்னம் போன்றவடிவையுடையனான மாயன் கண்ணன் போல்,Maayan kannan pol - மாயக் கண்ணனைப் போலயிருக்கிற கோட்டிய வில்லோடு மின்னும் மேகம் குழாங்கள் காள்!,Kottiya villodu minnum megam kuzhaangal kaal - வளைக்கப்பட்ட வில்லோடு கூடி மின்னுகிற மேகதிரள்களே! நும் உரு,Num uru - உங்கள் வடிவத்தை காட்டேன்மின்,Kaateenmin - காட்டாதே மறைத்துக்கொள்ளுங்கோள்; அது என் உயிர்க்கு காலன்,Adhu en uyirkku kaalan - அந்த உங்கள் வடிவம் என் பிராணனுக்கு மிருத்யு |