Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 3607 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
3607திருவாய்மொழி || (9-5–இன்னுயிர்ச் சேவலும்) (தலைவனைக் காண ஆசையுற்ற தலைவி அவனை நினைவூட்டும் பொருள்களால் தளர்ந்தமை கூறல்) (எம்பெருமானது வடிவுக்குப் போலியான மேக பங்க்திகளைக் கண்டு, உங்கள் வடிவைக் காட்டி என்னை முடியாதே கொள்ளுங்கோளென்கிறாள்.) 7
கூட்டுண்டு நீங்கிய கோலத் தாமரைக் கண் செவ்வாய்
வாட்டமில் என் கரு மாணிக்கம் கண்ணன் மாயன் போல்
கோட்டிய வில்லோடு மின்னும் மேகக் குழாங்கள் காள்
காட்டேன்மின் நும் உரு என் உயிர்க்கு அது காலனே–9-5-7
கூட்டுண்டு நீங்கிய,Koottundu neengiya - என்னோடு கலந்து பிரிந்த
கோலம் தாமரை கண் செம்வாய்,Kolam thaamarai kan semvaai - அழகிய தாமரை போன்ற கண்களையும் சிவந்த அதாத்தையு முடையனாய்
வாட்டம் இல் என் கரு மாணிக்கம்,Vaattam il en karu maanikam - இடைவிடாமல் என்னினைவிலேயேயிருக்கிற நீலரத்னம் போன்றவடிவையுடையனான
மாயன் கண்ணன் போல்,Maayan kannan pol - மாயக் கண்ணனைப் போலயிருக்கிற
கோட்டிய வில்லோடு மின்னும் மேகம் குழாங்கள் காள்!,Kottiya villodu minnum megam kuzhaangal kaal - வளைக்கப்பட்ட வில்லோடு கூடி மின்னுகிற மேகதிரள்களே!
நும் உரு,Num uru - உங்கள் வடிவத்தை
காட்டேன்மின்,Kaateenmin - காட்டாதே மறைத்துக்கொள்ளுங்கோள்;
அது என் உயிர்க்கு காலன்,Adhu en uyirkku kaalan - அந்த உங்கள் வடிவம் என் பிராணனுக்கு மிருத்யு