| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 3608 | திருவாய்மொழி || (9-5–இன்னுயிர்ச் சேவலும்) (தலைவனைக் காண ஆசையுற்ற தலைவி அவனை நினைவூட்டும் பொருள்களால் தளர்ந்தமை கூறல்) (ஸ்ரீ ஆறாயிரப்படி-ஸ்ரீ கண்ணனுடைய திரு நாமங்களை சொல்லில் நான் முடிவன்-அவற்றைச் சொல்லாது ஒழிய வேணும் என்று உங்களை நான் இரக்க பின்னையும் அவற்றையே சொல்லிக் கொன்றி கோள் – நான் உங்களை வளர்த்த பிரயோஜனம் அழகிதாகப் பெற்றேன் என்று தன் குயில்களே இன்னாதாகிறாள்.) 8 | உயிர்க்கு அது காலன் என்று உம்மை யான் இரந்தேற்கு நீர் குயிற் பைதல் காள் கண்ணன் நாமமே குழறிக் கொன்றீர் தயிர் பழம் சோற்றோடு பால் அடிசிலும் தந்து சொல் பயிற்றிய நல் வளம் ஊட்டினீர் பண்பு உடையீரே –9-5-8 | குயீல் பைதல்காள்,Kuyil paithalkaal - குயிற் குட்டிகளே அது உயிர்க்கு காலன் என்று,Adhu uyirkku kaalan endru - (கண்ணனுடைய நாமமாகிற) அது என்னுயிர்க்கு மிருத்யுவென்று சொல்லி உம்மை யான் இரந்தேற்கு,Unmai yaan iranthearku - (அந்த க்ருஷ்ண நாமத்தைச் சொல்ல வேண்டாவென்) உங்களை வேண்டிக்கொண்ட என்னை கண்ணன் நாமமே குழறி கொன்றீர்,Kannan naamame kuzhaari kondreer - அந்தக் கண்ணன்நாமங்களையே அநக்ஷரமதுரமாகச் சொல்லிக் கொலை செய்கிறீர்கள் தயிர் பழஞ்,Thayir pazhanj - தயிரையும் பழைய சோற்றையும் சோற்றோடு பால் அடிசிலும் தந்து,Paal adisilum thanthu - பாலையும் செஞ்சோற்றையு மூட்டி சொல் பயிற்றிய,Sol payitriya - அவனது திருநாமங்களாகிற சொற்களை கற்பித்தத்ற்குக் கைம்மாறாக நல் வளம் ஊட்டீவீர்,Nal valam oottiveer - (இப்படி யென்னைக் கொலை செய்கையாகிற) நல்ல காரியம் செய்தீர்கள் பண்பு உடையீரே,Panbu udaiyeere - நீங்கள் நல்ல தர்மிஷ்டர்களே |