Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 3608 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
3608திருவாய்மொழி || (9-5–இன்னுயிர்ச் சேவலும்) (தலைவனைக் காண ஆசையுற்ற தலைவி அவனை நினைவூட்டும் பொருள்களால் தளர்ந்தமை கூறல்) (ஸ்ரீ ஆறாயிரப்படி-ஸ்ரீ கண்ணனுடைய திரு நாமங்களை சொல்லில் நான் முடிவன்-அவற்றைச் சொல்லாது ஒழிய வேணும் என்று உங்களை நான் இரக்க பின்னையும் அவற்றையே சொல்லிக் கொன்றி கோள் – நான் உங்களை வளர்த்த பிரயோஜனம் அழகிதாகப் பெற்றேன் என்று தன் குயில்களே இன்னாதாகிறாள்.) 8
உயிர்க்கு அது காலன் என்று உம்மை யான் இரந்தேற்கு நீர்
குயிற் பைதல் காள் கண்ணன் நாமமே குழறிக் கொன்றீர்
தயிர் பழம் சோற்றோடு பால் அடிசிலும் தந்து சொல்
பயிற்றிய நல் வளம் ஊட்டினீர் பண்பு உடையீரே –9-5-8
குயீல் பைதல்காள்,Kuyil paithalkaal - குயிற் குட்டிகளே
அது உயிர்க்கு காலன் என்று,Adhu uyirkku kaalan endru - (கண்ணனுடைய நாமமாகிற) அது என்னுயிர்க்கு மிருத்யுவென்று சொல்லி
உம்மை யான் இரந்தேற்கு,Unmai yaan iranthearku - (அந்த க்ருஷ்ண நாமத்தைச் சொல்ல வேண்டாவென்) உங்களை வேண்டிக்கொண்ட என்னை
கண்ணன் நாமமே குழறி கொன்றீர்,Kannan naamame kuzhaari kondreer - அந்தக் கண்ணன்நாமங்களையே அநக்ஷரமதுரமாகச் சொல்லிக் கொலை செய்கிறீர்கள்
தயிர் பழஞ்,Thayir pazhanj - தயிரையும் பழைய சோற்றையும் சோற்றோடு
பால் அடிசிலும் தந்து,Paal adisilum thanthu - பாலையும் செஞ்சோற்றையு மூட்டி
சொல் பயிற்றிய,Sol payitriya - அவனது திருநாமங்களாகிற சொற்களை கற்பித்தத்ற்குக் கைம்மாறாக
நல் வளம் ஊட்டீவீர்,Nal valam oottiveer - (இப்படி யென்னைக் கொலை செய்கையாகிற) நல்ல காரியம் செய்தீர்கள்
பண்பு உடையீரே,Panbu udaiyeere - நீங்கள் நல்ல தர்மிஷ்டர்களே