| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 3609 | திருவாய்மொழி || (9-5–இன்னுயிர்ச் சேவலும்) (தலைவனைக் காண ஆசையுற்ற தலைவி அவனை நினைவூட்டும் பொருள்களால் தளர்ந்தமை கூறல்) (மதுவைப் பருகிக் களித்துப் பாடுகிற சில வண்டுகளையும் தும்பிகளையுங் குறித்து உங்கள் தொனி என்னால் பொறுக்கப் போகிறதில்லையே; பாடாதே கொள்ளுங்கோள் என்கிறாள்.) 9 | பண்புடை வண்டொடு தும்பிகாள் பண் மிழற்றேன்மின் புண்புரை வேல்கொடு குத்தால் ஒக்கும் நும் இன்குரல் தண் பெரு நீர்த் தடம் தாமரை மலர்ந்தால் ஒக்கும் கண் பெரும் கண்ணன் நம் ஆவி உண்டு எழ நண்ணினான்–9-5-9 | பண்பு உடை வண்டொடு தும்பிகான்,Panbu udai vandodu thumbikaan - பாட்டின் நீர்மையை யுடைய வண்டுகளோடு கூடின தும்பிகளே நும் இன் குரல்,Num in kural - உங்களுடைய இனிய குரலானது புண் இரை வேல் கொடு குத்தால் ஒங்கும்,Pun irai vel kodu kutthal ongum - புண்ணின் புரையிலே வேலைக் கொண்டு குத்தினாற்போலேயிரா நின்றது பண் மிழற்றேன்மின்,Pan mizhaarelmin - பண்பாடு தலைத்தவிருங்கள் தண் பெரு நீர் தடம்,Than peru neer tadam - குளிர்ந்து நிரம்பின நீரையுடைய தடாகம் தாமரை மலர்ந்தால் ஒக்கும்,Thaamarai malarndhaal okkum - தாமரை மலரப் பெற்றாற்போலேயாய் பெரு கண் கண்ணன்,Peru kan kannan - மிகப் பெரிய கண்களை யுடையனான க்ருஷ்ணன் நம் ஆவி உண்டு,Nam aavi undu - நமது உயிரைக் கவர்ந்து எழ நண்ணினான்,Eza nanninaan - அகன்று போயினன் |