Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 3609 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
3609திருவாய்மொழி || (9-5–இன்னுயிர்ச் சேவலும்) (தலைவனைக் காண ஆசையுற்ற தலைவி அவனை நினைவூட்டும் பொருள்களால் தளர்ந்தமை கூறல்) (மதுவைப் பருகிக் களித்துப் பாடுகிற சில வண்டுகளையும் தும்பிகளையுங் குறித்து உங்கள் தொனி என்னால் பொறுக்கப் போகிறதில்லையே; பாடாதே கொள்ளுங்கோள் என்கிறாள்.) 9
பண்புடை வண்டொடு தும்பிகாள் பண் மிழற்றேன்மின்
புண்புரை வேல்கொடு குத்தால் ஒக்கும் நும் இன்குரல்
தண் பெரு நீர்த் தடம் தாமரை மலர்ந்தால் ஒக்கும்
கண் பெரும் கண்ணன் நம் ஆவி உண்டு எழ நண்ணினான்–9-5-9
பண்பு உடை வண்டொடு தும்பிகான்,Panbu udai vandodu thumbikaan - பாட்டின் நீர்மையை யுடைய வண்டுகளோடு கூடின தும்பிகளே
நும் இன் குரல்,Num in kural - உங்களுடைய இனிய குரலானது
புண் இரை வேல் கொடு குத்தால் ஒங்கும்,Pun irai vel kodu kutthal ongum - புண்ணின் புரையிலே வேலைக் கொண்டு குத்தினாற்போலேயிரா நின்றது
பண் மிழற்றேன்மின்,Pan mizhaarelmin - பண்பாடு தலைத்தவிருங்கள்
தண் பெரு நீர் தடம்,Than peru neer tadam - குளிர்ந்து நிரம்பின நீரையுடைய தடாகம்
தாமரை மலர்ந்தால் ஒக்கும்,Thaamarai malarndhaal okkum - தாமரை மலரப் பெற்றாற்போலேயாய்
பெரு கண் கண்ணன்,Peru kan kannan - மிகப் பெரிய கண்களை யுடையனான க்ருஷ்ணன்
நம் ஆவி உண்டு,Nam aavi undu - நமது உயிரைக் கவர்ந்து
எழ நண்ணினான்,Eza nanninaan - அகன்று போயினன்