Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 3610 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
3610திருவாய்மொழி || (9-5–இன்னுயிர்ச் சேவலும்) (தலைவனைக் காண ஆசையுற்ற தலைவி அவனை நினைவூட்டும் பொருள்களால் தளர்ந்தமை கூறல்) (சில நாரைக் குழாங்கள் அருகே யிருந்து மந்த்ராலோசனை செய்யுமாபோலே தென்பட்டன; தன்னை முடிப்பதற்கு அவை ஆலோசிப்பதாகக் கொண்டு அந்தோ! நான் முடிந்தேன் ; இனி நீங்கள் திரண்டு பயனென்கொல்? என்கிறாள்.) 10
எழ நண்ணி நாமும் நம் வான நாடனோடு ஒன்றினோம்
பழன நல் நாரைக் குழாங்கள் காள் பயின்று என் இனி
இழை நல்ல ஆக்கையும் பையவே புயக்கு அற்றது
தழை நல்ல இன்பம் தலைப் பெய்து எங்கும் தழைக்கவே–9-5-10
யழனம் முதல் தாரை குழாய்கள்தான்,Yazhanam mudhal thaarai kuzhaaykal thaan - நீர்நிலங்களிலே திரிகிற நல்ல நாரைத் திரள்களே!
தாமும் எழ நண்ணி,Thaamum eza nanni - நாம் இவ்விபூகியை விட்டெழுந்து
நம் வானநாடனோடு ஒன்றினோம்,Nam vaananaadano du ondrinom - நம்பரம பத நாதனோடே சேர்ந்து பொருந்தி விட்டோம்
இனி பயின்று என்,Ini painru en - (இனி நீங்கள் என்னை முடிக்கத் திரளவிருந்து) ஆலோசிப்பதில் என்ன லாபம்?
இழை நல்ல ஆக்கையும்,Izai nalla aakkaiyum - ஆபரணாபிராமநான சரீரமும்
பையவே,Paiyave - நாளடைவிலே
புயக்கற்றது,Puyakkatradhu - வசையற்றதாயிற்று
எங்கும்,Engum - உலகமெல்லாம்
தழை நல்ல இன்பம் தலைப்பெய்து,Thazhai nalla inbam thalaippeythu - விஸ்தீர்ணமாய் நன்றான ஸுகத்தைப் பெற்று
தழைக்க,Thazhaikka - வாழ்ந்திடுக