| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 3610 | திருவாய்மொழி || (9-5–இன்னுயிர்ச் சேவலும்) (தலைவனைக் காண ஆசையுற்ற தலைவி அவனை நினைவூட்டும் பொருள்களால் தளர்ந்தமை கூறல்) (சில நாரைக் குழாங்கள் அருகே யிருந்து மந்த்ராலோசனை செய்யுமாபோலே தென்பட்டன; தன்னை முடிப்பதற்கு அவை ஆலோசிப்பதாகக் கொண்டு அந்தோ! நான் முடிந்தேன் ; இனி நீங்கள் திரண்டு பயனென்கொல்? என்கிறாள்.) 10 | எழ நண்ணி நாமும் நம் வான நாடனோடு ஒன்றினோம் பழன நல் நாரைக் குழாங்கள் காள் பயின்று என் இனி இழை நல்ல ஆக்கையும் பையவே புயக்கு அற்றது தழை நல்ல இன்பம் தலைப் பெய்து எங்கும் தழைக்கவே–9-5-10 | யழனம் முதல் தாரை குழாய்கள்தான்,Yazhanam mudhal thaarai kuzhaaykal thaan - நீர்நிலங்களிலே திரிகிற நல்ல நாரைத் திரள்களே! தாமும் எழ நண்ணி,Thaamum eza nanni - நாம் இவ்விபூகியை விட்டெழுந்து நம் வானநாடனோடு ஒன்றினோம்,Nam vaananaadano du ondrinom - நம்பரம பத நாதனோடே சேர்ந்து பொருந்தி விட்டோம் இனி பயின்று என்,Ini painru en - (இனி நீங்கள் என்னை முடிக்கத் திரளவிருந்து) ஆலோசிப்பதில் என்ன லாபம்? இழை நல்ல ஆக்கையும்,Izai nalla aakkaiyum - ஆபரணாபிராமநான சரீரமும் பையவே,Paiyave - நாளடைவிலே புயக்கற்றது,Puyakkatradhu - வசையற்றதாயிற்று எங்கும்,Engum - உலகமெல்லாம் தழை நல்ல இன்பம் தலைப்பெய்து,Thazhai nalla inbam thalaippeythu - விஸ்தீர்ணமாய் நன்றான ஸுகத்தைப் பெற்று தழைக்க,Thazhaikka - வாழ்ந்திடுக |