திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 3612 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
3612திருவாய்மொழி || (9-6–உருகுமால் நெஞ்சம்) (ஆழ்வார் எம்பெருமானது சீரைத் துயரத்துடன் கூறுதல் (திருக்காட்கரை)) (திருக்காட்கரை யெம்பெருமானுடைய ஆச்சரியமான பரிமாற்றங்களை நினைக்கும் போதெல்லாம் நெஞ்சு நீர்ப்பண்டமாகின்றதே யென்கிறார்.) 1
உருகுமால் நெஞ்சம் உயிரின் பரம் அன்றி பெருகுமால் வேட்கையும் என் செய்கேன் தொண்டனேன் தெருவு எல்லாம் காவி கமழ் திருக் காட்கரை மருவிய மாயன் தன் மாயம் நினைதொறே–9-6-1
பதவுரை Show / Hide
தெரு எல்லாம் காலி கமழ்,Teru ellam kaali kamazh - தெருவுகள் தோறும் செங்கழு நீர்ப்பூ வாஸிக்கப்பெற்ற
திருக் காட்கரை,Thiruk kaatkarai - திருக்காட்கரையென்னுந் திருப்பதியிலே
மருவிய,Maruviya - பொருந்திவர்த்திக்கிற
மாயன் தன் மாயம்,Maayan than maayam - எம்பெருமானுடைய ஆச்சரியமான ஸெளந்தர்யசீலாதிகளை
நினைதொறு,Ninaithoru - நினைக்கிறபோதெல்லாம்
நெஞ்சம் உருகும்,Nenjam urugum - நெஞ்சு சுட்டுக்குலைந்து உருகாநின்றது
உயிரின் பரம் அன்றி,Uyirin param andri - ஆத்மாவுக்குத் தாங்கக்கூடிய அளவல்லாமல்
வேட்கை பெருகும்,Vetkai perugum - ஆசை கரைபுரண்டு செல்லா நின்றது
தொண்டனேன் என் செய்கேன்,Thondaneen en seigain - சபலனான நான் என்ன செய்யக் கடவேன்?