Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 3612 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
3612திருவாய்மொழி || (9-6–உருகுமால் நெஞ்சம்) (ஆழ்வார் எம்பெருமானது சீரைத் துயரத்துடன் கூறுதல் (திருக்காட்கரை)) (திருக்காட்கரை யெம்பெருமானுடைய ஆச்சரியமான பரிமாற்றங்களை நினைக்கும் போதெல்லாம் நெஞ்சு நீர்ப்பண்டமாகின்றதே யென்கிறார்.) 1
உருகுமால் நெஞ்சம் உயிரின் பரம் அன்றி
பெருகுமால் வேட்கையும் என் செய்கேன் தொண்டனேன்
தெருவு எல்லாம் காவி கமழ் திருக் காட்கரை
மருவிய மாயன் தன் மாயம் நினைதொறே–9-6-1
தெரு எல்லாம் காலி கமழ்,Teru ellam kaali kamazh - தெருவுகள் தோறும் செங்கழு நீர்ப்பூ வாஸிக்கப்பெற்ற
திருக் காட்கரை,Thiruk kaatkarai - திருக்காட்கரையென்னுந் திருப்பதியிலே
மருவிய,Maruviya - பொருந்திவர்த்திக்கிற
மாயன் தன் மாயம்,Maayan than maayam - எம்பெருமானுடைய ஆச்சரியமான ஸெளந்தர்யசீலாதிகளை
நினைதொறு,Ninaithoru - நினைக்கிறபோதெல்லாம்
நெஞ்சம் உருகும்,Nenjam urugum - நெஞ்சு சுட்டுக்குலைந்து உருகாநின்றது
உயிரின் பரம் அன்றி,Uyirin param andri - ஆத்மாவுக்குத் தாங்கக்கூடிய அளவல்லாமல்
வேட்கை பெருகும்,Vetkai perugum - ஆசை கரைபுரண்டு செல்லா நின்றது
தொண்டனேன் என் செய்கேன்,Thondaneen en seigain - சபலனான நான் என்ன செய்யக் கடவேன்?