| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 3613 | திருவாய்மொழி || (9-6–உருகுமால் நெஞ்சம்) (ஆழ்வார் எம்பெருமானது சீரைத் துயரத்துடன் கூறுதல் (திருக்காட்கரை)) (திருக்காட்கரை யெம்பெருமானை நோக்கி ‘உன்னோடு நான் கலந்து பரிமாறின பரிமாற்றத்தை நினைக்க சக்தனாகின்றிலேன்! ‘ என்கிறார்.) 2 | நினைதொறும் சொல்லும் தொறும் நெஞ்சு இடிந்து உகும் வினை கொள் சீர் பாடிலும் வேம் எனது ஆர் உயிர் சுனை கொள் பூஞ்சோலைத் தென் காட்கரை என் அப்பா நினைகிலேன் நான் உனக்கு ஆள் செய்யும் நீர்மையே –9-6-2 | நினை தொள் பூ சோலை,Ninaithol poo solai - தடாகங்களையுடைய பூஞ்சோலை களையுடைந்தான தென் காட்கரை,Then kaatkarai - திருக்காட்கரை யிவெழுந்தருளியிருக்கிற என் அப்பா,En appa - எம்பெருமானே வினை கொள் சீர்,Vinai kol seer - பாபங்களைக் கொள்ளை கொள்ளும்தான் (உனது) திருக்குணங்களை நினைதொறும்,Ninaithorum - நினைக்கிற போதெல்லாம் நெஞ்சு இடிந்து,Nenju idinthu - நெஞ்சானது சிதிலமாகி சொல்லுந் தொறும்உகும்,Sollun thorumugum - (அக்குணங்களைச்) சொல்லாத தொடங்கின போதெல்லாம் (அந்த நெஞ்சானது) நீராயுருநா நின்றது பாடிலும்,Paadiyum - (அக்குணங்களைப்) பாடத்தொடங்கினாலோ எனது ஆர் உயிர் வேம்,Enathu ar uyir vem - என்னுடைய அருமையான ஆத்ம வஸ்துவானது வேலா நின்றது. நான்,Naan - இப்படியாகப் பெற்ற நான் உனக்கு ஆள் செய்யும் நீர்மை நினைகிலேன்,Unakku aaal seiyyum neermai ninaikilaan - உனக்குந் கைங்கரியம்பண்ணும் விதத்தை அறிகின்றிலேன் |