Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 3613 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
3613திருவாய்மொழி || (9-6–உருகுமால் நெஞ்சம்) (ஆழ்வார் எம்பெருமானது சீரைத் துயரத்துடன் கூறுதல் (திருக்காட்கரை)) (திருக்காட்கரை யெம்பெருமானை நோக்கி ‘உன்னோடு நான் கலந்து பரிமாறின பரிமாற்றத்தை நினைக்க சக்தனாகின்றிலேன்! ‘ என்கிறார்.) 2
நினைதொறும் சொல்லும் தொறும் நெஞ்சு இடிந்து உகும்
வினை கொள் சீர் பாடிலும் வேம் எனது ஆர் உயிர்
சுனை கொள் பூஞ்சோலைத் தென் காட்கரை என் அப்பா
நினைகிலேன் நான் உனக்கு ஆள் செய்யும் நீர்மையே –9-6-2
நினை தொள் பூ சோலை,Ninaithol poo solai - தடாகங்களையுடைய பூஞ்சோலை களையுடைந்தான
தென் காட்கரை,Then kaatkarai - திருக்காட்கரை யிவெழுந்தருளியிருக்கிற
என் அப்பா,En appa - எம்பெருமானே
வினை கொள் சீர்,Vinai kol seer - பாபங்களைக் கொள்ளை கொள்ளும்தான் (உனது) திருக்குணங்களை
நினைதொறும்,Ninaithorum - நினைக்கிற போதெல்லாம்
நெஞ்சு இடிந்து,Nenju idinthu - நெஞ்சானது சிதிலமாகி
சொல்லுந் தொறும்உகும்,Sollun thorumugum - (அக்குணங்களைச்) சொல்லாத தொடங்கின போதெல்லாம் (அந்த நெஞ்சானது) நீராயுருநா நின்றது
பாடிலும்,Paadiyum - (அக்குணங்களைப்) பாடத்தொடங்கினாலோ
எனது ஆர் உயிர் வேம்,Enathu ar uyir vem - என்னுடைய அருமையான ஆத்ம வஸ்துவானது வேலா நின்றது.
நான்,Naan - இப்படியாகப் பெற்ற நான்
உனக்கு ஆள் செய்யும் நீர்மை நினைகிலேன்,Unakku aaal seiyyum neermai ninaikilaan - உனக்குந் கைங்கரியம்பண்ணும் விதத்தை அறிகின்றிலேன்