| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 3614 | திருவாய்மொழி || (9-6–உருகுமால் நெஞ்சம்) (ஆழ்வார் எம்பெருமானது சீரைத் துயரத்துடன் கூறுதல் (திருக்காட்கரை)) (கீழ்ப்பாட்டின் ஈற்றடிக்கு வியாக்கியானமாயிருக்கிறது இப்பாட்டெல்லாம். அடிமை கொளுவதாக ஒரு வியாஜமிட்டு உள்ளே புகுந்து தன் படிகளைக் காட்டி ஸர்வஸ்வாப ஹாரம் பண்ணின வாற்றை அந்தோ! நினைக்க மாட்டிற்றிலேனென்கிறார்.) 3 | நீர்மையால் நெஞ்சம் வஞ்சித்துப் புகுந்து என்னை ஈர்மை செய்து என் உயிராய் என் உயிர் உண்டான் சீர் மல்கு சோலைத் தென் காட் கரை என் அப்பன் கார் முகில் வண்ணன் தன் கள்வம் அறிகிலன்–9-6-3 | நெஞ்சம் வஞ்சித்து புகுந்து,Nenjam vanjithu pukundhu - ஏதோ வஞ்சனையினால் என் நெஞ்சினுள்ளே புகுந்து நீர்மையால் என்னை ஈர்மை செய்து,Neermaiyaal ennai eermai seydhu - முறைகெடப் பரிமாறும் சீல குணத்தினால் என்னை நலிந்து என் உயிர் ஆய் என் உயிர் உண்டான்,En uyir aayi en uyir undaan - எனக்குத் தாரகனாயிருப்பன் போல என்னை யழித்தவனும் சீர்மல்கு சோலை தென் காட்கரை என் அப்பன்,Seer malgu solai then kaatkarai en appan - அழகு நிரம்பிய சோலைகளால் சூழப்பட்ட திருக்காட்கரையியெழுந்தருளியிருக்கும் பெருமானும் கார்முகில் வண்ணன் தன்,Kaarmukil vannan than - காளமேக வண்ணனுமானபரம புருஷனுடைய கள்வம்,Kalvam - க்ருத்ரிமத்தை அறிகிலேன்,Arikilaan - தெரிந்து கொள்ள மாட்டாதவனாயிருக்கிறேன். |