Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 3616 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
3616திருவாய்மொழி || (9-6–உருகுமால் நெஞ்சம்) (ஆழ்வார் எம்பெருமானது சீரைத் துயரத்துடன் கூறுதல் (திருக்காட்கரை)) (எம்பெருமான் என்னை யடிமை கொள்வான்போலே புகுந்து என் சரீரத்தையும் ஆத்மாவையும் ஒக்க புஜியா நின்றானே! இது என்ன வியாமோஹம்! என்று வியக்கிறார்.) 5
திருவருள் செய்பவன் போல என் உள் புகுந்து
உருவமும் ஓர் ஆர் உயிரும் உடனே உண்டான்
திருவளர் சோலைத் தென் காட்கரை என் அப்பன்
கருவளர் மேனி நம் கண்ணன் கள்வங்களே–9-6-5
திரு அருள் செய்பவன் போல,Thiru arul seipayavan pola - என்னிடமிருந்து அடிமை கொள்ளு கையாகிற திருவருளைச் செய்பவன் போல அவிநயம் காட்டி
என் உன் புகுந்து,En un pukundhu - என் நெஞ்சிலே புகுந்து
உருவமும் ஆர் உயிரும்,Uruvamum ar uyirum - உடலையு முயிரையும்
உடனே உண்டான்,Udane undaan - ஹேய உபாதேய விபாக மில்லாதபடி ஏகரீதியாக அனுபவித்தான்
திரு வளர் சோலை தென் காட்கரை என் அப்பன்,Thiru valar solai then kaatkarai en appan - அழகு மிகுந்த சோலைகளையுடைய தென் காட்கரை என் அப்பன்
கருவளர்மேனி,Karuvalar meeni - என் அப்பன் சாமநிறம் விஞ்சின திரு மேனியை யுடையவனாய்க் கொண்டு
என் கண்ணன்,En kannan - எனக்கு விதேயனாயிருந்த அப்பெருமானுடைய
கள்வங்களே,Kalvangale - வஞ்சனை யிருக்கிறபடி என்னே