Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 3618 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
3618திருவாய்மொழி || (9-6–உருகுமால் நெஞ்சம்) (ஆழ்வார் எம்பெருமானது சீரைத் துயரத்துடன் கூறுதல் (திருக்காட்கரை)) (என்னை யடிமை கொள்வாரைப்போலே வந்து புகுந்து என்னுயிரை மானப்புஜித்து, பின்னையும் புஜியாதான் போலே கிடந்து படாநின்றானென்கிறார்.) 7
காட்கரை ஏத்தும் அதனுள் கண்ணா என்னும்
வேட்கை நோய் கூர நினைந்து கரைந்து உகும்
ஆட் கொள்வான் ஒத்து என் உயிர் உண்ட மாயனால்
கோட் குறை பட்டது என் ஆர் உயிர் கோள் உண்டே–9-6-7
ஆள் கொள்வான் ஒத்து,Aaal kolvaan oththu - அடிமை கொள்வரைப் போலே (புகுந்து)
என் உயிர் உண்ட மாயனால்,En uyir unda maayaanal - என்னாத்மாவைக் கொள்ளை கொண்ட மாயப்பெருமானாலே
கோள் உண்டே,Kowl undae - புஜித்துக் கொள்ளப்படச் செய் நேயும்
கோள் குறைபட்டது,Kowl kuraipattadhu - போகம் மிச்சப்பட்டிருக்கிற தென்னலாம்படியிருக்கிற
என் ஆருயிர்,En aar uyir - என்னாத்மாவானது
காட்கரை ஏத்தும்,Kaatkarai Yeththum - அவனுறையுமிடமான திருகட்கரையைப் புகழா நின்றது.
அதனுள் கண்ணா என்னும்,Adhanul kannaa ennum - அத்திருப்பதியிலே நிற்கிற கண்ணா வென்று அழையா நின்றது (அவ்வளவுமன்றிக்கே)
வேட்கை நோய் கூர,Vetkai noi koora - காதல் நோய் மிகப்பெற்று
நினைந்து கரைந்து உகும்,Ninaindhu karaindhu ugum - (அவனுடைய பரிமாற்றங்களை)நினைத்து உருகி சிதிலமாகா நின்றது.