Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 3620 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
3620திருவாய்மொழி || (9-6–உருகுமால் நெஞ்சம்) (ஆழ்வார் எம்பெருமானது சீரைத் துயரத்துடன் கூறுதல் (திருக்காட்கரை)) (கீழ்ப்பாட்டில் “ஆளன்றே பட்டது என்னாருயில் பட்டது” என்றார் ; எம்பெருமானுடைய திருக்குணங்களில் ஊடுபட்டவர்களான எல்லார்க்குமே இது ஸஹஜந்தானே ; உமக்கு மாத்திரம் அஸாதாரணமோ ! என்று சில் கேட்பதாகக் கொண்டு நான் பட்டது யாரும் பட்டிலரென்கிறாரிப்பாட்டில்.) 9
ஆர் உயிர் பட்டது எனது உயிர் பட்டது
பேர் இதழ்த் தாமரைக் கண் கனிவாயது ஓர்
கார் எழில் மேகம் தென் காட் கரை கோயில் கொள்
சீர் எழில் நால் தடம் தோள் தெய்வ வாரிக்கே–9-6-9
பேர் இதழ் தாமரை கண்,Peer ithazh thaamarai kan - பெரிய விதழை யுடைய தாமரை போன்ற திருக்கண்களையும்
கனி வாயது ஓர்,Kani vaayadhu or - கனிபோந் சிவந்த வாயையுமுடைத்தா யிருப்பதொரு
சார் எழில் மேகம்,Saar ezhil megam - கறுத்தழகிய மேகம் போன்ற வாயையுடையவனாய்க் கொண்டு
தென்காட்கரை கோயில்கொள்,Then kaatkarai koilkol - திருக்காட்கரையை உறைவிடமாகக் கொண்ட
சீர் எழில் நால் தட தோள்,Seer ezhil naal tada thol - அழகுமிக்க நான்கு திருத் தோள்களையுடையனாய்
தெயவம் வாரிக்கு,Theevam vaarikku - தெய்வங்களுக்குக் கடல் போன்வனான பெருமானுக்கு
எனது உயிர் பட்டது,Enathu uyir pattadhu - என்னாத்மா பட்டபாடு
ஆர் உயிர் பட்டது,Ar uyir pattadhu - வேறு யாருடைய ஆத்மா பட்டது? (நான் பகவத் விஷயத்தில் பட்டபாடு ஒருவரும் படவில்லை யென்கை)