Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 3621 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
3621திருவாய்மொழி || (9-6–உருகுமால் நெஞ்சம்) (ஆழ்வார் எம்பெருமானது சீரைத் துயரத்துடன் கூறுதல் (திருக்காட்கரை)) (ஸ்ரீ ஒன்பதினாயிரப்படி -தம்மோடு கலந்த எம்பெருமானுக்கு தம்மிலும் அபி நிவேசம் மிக்கு இருந்த படியையும் அத்தாலே மிகவும் நோவு பட்ட படியையும் அருளிச் செய்கிறார். 10
வாரிக் கொண்டு உன்னை விழுங்குவன் காணில் என்று
ஆர்வுற்ற என்னை ஒழிய என்னில் முன்னம்
பாரித்துத் தான் என்னை முற்றப் பருகினான்
கார் ஒக்கும் காட் கரை அப்பன் கடியனே–9-6-10
உன்னை நானில்,Unnai naanil - உன்னைக் காணப் பெறில்
வாரிக் கொண்டு விழுங்குவன் என்று,Vaarik kondu vizhunguvaan endru - கபளீகரிப்பேனென்ற
ஆர்வு உற்ற,Aarvu utra - ஆசைகொண்ட
என்னை ஒழிய,Ennai ozhiya - என்னளவன்றியே
என்னில் முன்னம் பாரித்து,Ennil munnam paarithu - (இப்படி செய்யவேணுமென்று) எனக்கு முன்னமே மனோரதித்து
தான் என்னைமுற்ற பருகினான்,Thaan ennai mutra paruginan - என்னை நிச்சேஷமாகக் கபளி கரித் தவனான
கார் ஒக்கும் காட்கரை அப்பன்,Kaar okugum kaatkarai appan - காளமேகம் போன்ற திருக்காட்கரையப்பன்
கடியன்,Kadian - ஸ்வகார்யத்தில் பதற்ற முன்னவன்