Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 3622 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
3622திருவாய்மொழி || (9-6–உருகுமால் நெஞ்சம்) (ஆழ்வார் எம்பெருமானது சீரைத் துயரத்துடன் கூறுதல் (திருக்காட்கரை)) (இந்தத் திருவாய்மொழி கற்றார்க்குப் பிறவி முடிந்து அதுக்கடியான ஸம்ஸாரமும் நசிக்குமென்று பயனுரைத்துத் தலைகாட்டுகிறார்.) 11
கடியனாய்க் கஞ்சனைக் கொன்ற பிரான் தன்னைக்
கொடி மதிள் தென் குருகூர்ச் சடகோபன் சொல்
வடிவு அமை ஆயிரத்து இப்பத்தினால் சன்மம்
முடிவு எய்தி நாசம் கண்டீர்கள் எம் கானலே–9-6-11
கடியன் ஆய் கஞ்சனை பிரான் தன்னை,Kadian aayi kanjanai piraan thannai - விரைந்து கம்ஸனைக் கொன்ற கண்ணபிரான் விஷயமாக
கொடி மதில் தென் குரு கூர் சடகோபன் சொல்,Kodi madil then guru koor sadagopan sol - ஆழ்வாரளிச் செய்த
வடிவுஅமை ஆயிரத்து,Vadivu amai aayirathu - சொற்பொருளழகு பொலிந்த ஆயிரத்தினுள்ளும்
இ பத்தினால்,E paththinaal - இப்பதிகத்தினால்
எம் சன்மம் முடிவு எய்தி,Em sanmam mudivu eedhi - நம்முடைய ஜன்ம பரம்பரைகள் முடிவு பெற்று
கானல்,Kaanal - கானலென்னும்படியான ஸம்ஸாரம்
நாசம் கண்டீர்கள்,Naasam kandeergaal - நாசமடைந்தொழியு மென்பது திண்ணம்.