திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2 · அடைவு

and/or and/or Clear

Search Results for: 3625 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
3625திருவாய்மொழி || (9-7–எங்கானலகங்கழிவாய்) (எம் பெருமானது வடிவழகே பற்றுக்கோடாக தலைவி திருமூழிக்களத்தே பறவைகளைத் தூதுவிடல் (திருமூழிக்களம்)) (திருவாய்மொழியாயிரத்தினுள் தூது விடுகிற பதிகங்கள் நான் கென்று சொன்னோமே; அவற்றும் ஒவ்வொரு பாட்டு உயிராக வைக்கப்படுகிறது, இப்பதிக்த்திற்கு உயிரான பாட்டு இது; ஸ்ரீ ஒன்பதினாயிரப்படி -சில கொக்கினங்களையும் குருகினங்களையும் நோக்கி தன் அழகைக் காண் கைக்கு நாங்கள் யோக்யதை யுடையோம் அல்லோமோ -என்று கேளீர் -என்கிறாள்) 3
தக்கிலமே கேளீர்கள் தடம் புனல் வாய் இரை தேரும் கொக்கினங்காள் குருகினங்காள் குளிர் மூழிக் களத்து உறையும் செக்கமலத்து அலர்போலும் கண் கை கால் செங்கனி வாய் அக்கமலத்து இலைபோலும் திரு மேனி அடிகளுக்கே–9-7-3
பதவுரை Show / Hide
தட புனல் வாய்,Thada punal vaay - பெரிய ஜலாசயத்திலே
இரைதேரும்,Iraiththarum - இரை தேடித்திரினிற் கொக்கு இனங்காள் குருகு இனங்காள்!
குளிர் மூழிக்களத்து உறையும்,Kulir moozhik kalaththil uraiyum - குளிர்ந்த திருமூழிக்களத்திலே நித்ய வாஸம் பண்ணுமவராய்
செம் கமலத்து அலர் போலும் கண் கைகால்,Sem kamalaththil alar poyum kan kaigal - செந்தாமரைப் பூப்போன்ற திருக்கண் திருக்கை திருவடிகளை யுடையராய்
செம் கனி வாய்,Sem kani vaay - சிவந்து களிர்ந்த திருப்பவளத்தை யுடையராய்
அக் கமலத்து இலை போலும் திருமேனி,Akk kamalaththil ilai poyum thirumeni - அந்தத் தாமரையின் இலையை யொத்த திருமேனியையுமுடையரான
அடிகளுக்கு,Adigalukku - ஸ்வாமிக்கு
தக்கிலமே கேளீர்கள்,Thakkilam keleerkal - நாங்கள் தகுந்ததிருக்கமாட்டோ மாவென்று கேளுங்கள்