Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 3626 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
3626திருவாய்மொழி || (9-7–எங்கானலகங்கழிவாய்) (எம் பெருமானது வடிவழகே பற்றுக்கோடாக தலைவி திருமூழிக்களத்தே பறவைகளைத் தூதுவிடல் (திருமூழிக்களம்)) (சில மேகங்களை நோக்கி ‘என் வார்த்தையை அவனுக்குச் சொன்னால் உங்களுக்கு ஏதேனும் தண்டனை நேருமோ?’ என்கிறாள்.) 4
திருமேனி அடிகளுக்குத் தீ வினையேன் விடு தூதாய்
திரு மூழிக் களம் என்னும் செழு நகர் வாய் அணி முகில்காள்
திரு மேனி அவட்கு அருளீர் என்றக்கால் உம்மைத்தன்
திருமேனி ஒளி அகற்றித் தெளி விசும்பு கடியுமே–9-7-4
அணிமுகில்காள்,Animukilkalkal - அழகிய மேகங்களே
திருமூழிக்களம் என்னும் செழு நகர் வாய்,Tirumoolikkalam ennum chelu nagar vay - திருமூழிக்கவாமென்கிற திவ்ய க்ஷேத்திரத்திலே வர்த்திப்பவராய்
திருமேனி அடிகளுக்கு,Tirumeni adigalukku - சிறந்த திருமேனியையுடையரான ஸ்வாமிக்கு
தீ வினையேன் விடு தூது ஆய்,Ti vinayen vidu tutu ay - பாபியான நான் விடுகிற தூதாய்ச் சென்று
அவட்கு திருமேனி அருளீர் என்றக்கால்,Avadku tirumeni arulir enrakkal - பராங்குச நாயகிக்கு உமது திரு மேனியைக் கொடுத்தருளீர் என்று ஒரு வார்த்தை சொன்னால்
உம்மை,Ummai - இவ்வுபகாரம் செய்கிற உங்களை
தம் திருமேனி ஒளி அகற்றி,Tam tirumeni oli akatri - உங்கள் வடிவிலுள்ள புகாரை மாற்றி
தெளி விசும்பு கடியுமே,Teli vicumpu kadiyume - நிர்மலமான ஆகாசத்தில் நீங்கள் வர்த்திக்கமுடியாதபடி தண்டிப்பரோ