| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 3627 | திருவாய்மொழி || (9-7–எங்கானலகங்கழிவாய்) (எம் பெருமானது வடிவழகே பற்றுக்கோடாக தலைவி திருமூழிக்களத்தே பறவைகளைத் தூதுவிடல் (திருமூழிக்களம்)) (ஸ்ரீ ஆறாயிரப்படி –அவளுக்கு அருளீர் என்ன அமையுமோ -இன்னாருக்கு அருளீர் என்ன வேண்டாவோ என்னில் யாவள் ஒருத்தியுடைய நெஞ்சை யுமக்குத் திரு நாடாகக் கொண்டு நீர் உறைகிறீர்- அவளுக்கு அருளீர் என்று சொல்லி கோள் என்கிறாள்) 5 | தெளி விசும்பு கடித்து ஓடித் தீ வளைத்து மின் இலகும் ஒளி முகில்காள் திரு மூழிக் களத்து உறையும் ஒண் சுடர்குத் தெளிவிசும்பு திரு நாடாத் தீ வினையேன் மனத்து உறையும் துளிவார்கள் குழலார்க்கு என் தூதுரைத்தல் செப்புமினே–9-7-5 | தெளிவிசும்பு கடிது ஒடி,Telivicumpu kadidu odi - நிர்மலமான ஆகாசத்திலே விரைந்து பறந்து சென்று தீ வளைத்துமின் இலகும்,Ti valaittumin ilakum - கொள்ளி வட்டம் போலே அழகிய மின் விளங்கப்பெற்ற ஒளி முகில்காள்,Oli mukilkalkal - அழகிய மேகங்களே திரு மூழிக்களத்து உறையும்,Tiru moolikkalattu uraiyum - திருமூழிக்களத்தில் நித்யவாஸஞ் செய்தருள்கின்ற ஒண் சுடர்க்கு,On sudarkku - அழகிய தேஜோராசியாயும் தீ வினை யேன் மனத்து,Theevinai yen manattu - பாபியான என்னுடைய மனத்திலே தெளிவிசும்பு திருநாடு ஆ உறையும்,Telivicumpu tirunadu a uraiyum - தெளிவிசும்பான திருநாட்டிலே பண்ணும் வியாமோஹத்தைப்பண்ணி வாத்திப்பவராயும் துளி வார்கள் குழலார்க்கு,Tuli varkal kuzhalarkku - துளித்து ஒழுகின்ற மதுவையுடைய மயிர் முடியையுடையார்யுமிருக்கிற பெரியவர்க்கு என் தூதுஉரைத்தல் செய்யுமின்,En tuturaithal seyyumin - எனது தூதுமொழியைச் சொல்லுங்கள் |