திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2 · அடைவு

and/or and/or Clear

Search Results for: 3627 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
3627திருவாய்மொழி || (9-7–எங்கானலகங்கழிவாய்) (எம் பெருமானது வடிவழகே பற்றுக்கோடாக தலைவி திருமூழிக்களத்தே பறவைகளைத் தூதுவிடல் (திருமூழிக்களம்)) (ஸ்ரீ ஆறாயிரப்படி –அவளுக்கு அருளீர் என்ன அமையுமோ -இன்னாருக்கு அருளீர் என்ன வேண்டாவோ என்னில் யாவள் ஒருத்தியுடைய நெஞ்சை யுமக்குத் திரு நாடாகக் கொண்டு நீர் உறைகிறீர்- அவளுக்கு அருளீர் என்று சொல்லி கோள் என்கிறாள்) 5
தெளி விசும்பு கடித்து ஓடித் தீ வளைத்து மின் இலகும் ஒளி முகில்காள் திரு மூழிக் களத்து உறையும் ஒண் சுடர்குத் தெளிவிசும்பு திரு நாடாத் தீ வினையேன் மனத்து உறையும் துளிவார்கள் குழலார்க்கு என் தூதுரைத்தல் செப்புமினே–9-7-5
பதவுரை Show / Hide
தெளிவிசும்பு கடிது ஒடி,Telivicumpu kadidu odi - நிர்மலமான ஆகாசத்திலே விரைந்து பறந்து சென்று
தீ வளைத்துமின் இலகும்,Ti valaittumin ilakum - கொள்ளி வட்டம் போலே அழகிய மின் விளங்கப்பெற்ற
ஒளி முகில்காள்,Oli mukilkalkal - அழகிய மேகங்களே
திரு மூழிக்களத்து உறையும்,Tiru moolikkalattu uraiyum - திருமூழிக்களத்தில் நித்யவாஸஞ் செய்தருள்கின்ற
ஒண் சுடர்க்கு,On sudarkku - அழகிய தேஜோராசியாயும்
தீ வினை யேன் மனத்து,Theevinai yen manattu - பாபியான என்னுடைய மனத்திலே
தெளிவிசும்பு திருநாடு ஆ உறையும்,Telivicumpu tirunadu a uraiyum - தெளிவிசும்பான திருநாட்டிலே பண்ணும் வியாமோஹத்தைப்பண்ணி வாத்திப்பவராயும்
துளி வார்கள் குழலார்க்கு,Tuli varkal kuzhalarkku - துளித்து ஒழுகின்ற மதுவையுடைய மயிர் முடியையுடையார்யுமிருக்கிற பெரியவர்க்கு
என் தூதுஉரைத்தல் செய்யுமின்,En tuturaithal seyyumin - எனது தூதுமொழியைச் சொல்லுங்கள்