Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 3629 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
3629திருவாய்மொழி || (9-7–எங்கானலகங்கழிவாய்) (எம் பெருமானது வடிவழகே பற்றுக்கோடாக தலைவி திருமூழிக்களத்தே பறவைகளைத் தூதுவிடல் (திருமூழிக்களம்)) (சில குருகினங்களைக் குறித்துச் சொல்லுகிறாள்–எம் பெருமானைக்கண்டு, நீர் சிலரோடே கலந்து அவர்களைத் துறந்து அதுவே புகழாக வீற்றிருக்குமிவ்விருப்பு தருமோமென்று சொல்லுங்கோள் என்கிறாள்.) 7
சுடர் வளையும் கலையும் கொண்டு-அரு வினையேன் தோள் துறந்த
படர் புகழான் திரு மூழிக்-களத்து உறையும் பங்கயக் கண்
சுடர் பவள வாயனைக் கண்டு-ஒரு நாள் ஒரு தூய் மாற்றம்
படர் பொழில் வாய்க் குருகினங்காள்-எனக்கு ஓன்று பணியீரே–9-7-7
படர் பொழில்வாய் குருகு இனங்காள்,Padar pozhil vay kurugu inankal - பரந்து சோலையகத்தே வாழ்கிற குயிலினங்களே
சுடர் வளையும் கலையும் கொண்டு,Sudar valaiyum kalaiyum kondu - (எனது) அழகிய கைவளையையும் சேலையையும் கைக்கொண்டு
அருவினையேன் தோள் துறந்த,Aruvinaiyen thol thuranda - போக்கவரிய பாவஞ்செய்த என்னை விட்டுப்பிரிந்த
படர் புகழான்,Padar pugazhan - பரந்த புகழையுடையவனும்
பங்கயம் கண்,Pangayam kan - செந்தாமரைக்கண்ணனும்
சுடர்பவளம் வாயனை கண்டு,Sudar pavalam vayanai kandu - அழகிய பவழம்போன்ற வாயையுடையவனுமான எம்பெருமானைக் கண்டு
எனக்கு,Enakku - எனக்காக
ஒரு நாள்,Oru naal - ஒரு கால்
ஓர் தூய் மாற்றம் ஒன்று பணியீர்,Or thuya maatram onru paniyeer - ஒரு நல்வார்த்தை சொல்ல வேணும்.