Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 3630 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
3630திருவாய்மொழி || (9-7–எங்கானலகங்கழிவாய்) (எம் பெருமானது வடிவழகே பற்றுக்கோடாக தலைவி திருமூழிக்களத்தே பறவைகளைத் தூதுவிடல் (திருமூழிக்களம்)) (அவருடைய வடிவழகுக்கு என்ன அபாயம் நேருகிறதோவென்று அஞ்ச வேண்டாதபடி. ஸீரக்ஷிதாமாக வொரு திவ்ய தேசத்திலே யெழுந்தருளியிருந்தார்; இனி நம்முடைய ஆர்த்தி தீர்க்குமத்தனையே வேண்டுவது; ஆன பின்பு என்னுடைய ஆர்த்தியை அறிவியுங்கோளென்று சில வண்டுகளையும் தும்பிகளையுங்குறித்துச் சொல்லுகிறான். ஆறாயிரப்படி காண்மின்; – “வண்டினங்காள் தும்பிகாள்! உன்னழகைக் காணப்பெறாதே அவளிழந்துபோமித்தனையோ வென்று சொல்லிகோளென்கிறான்” என்று.) 8
எனக்கு ஓன்று பணியீர்காள்-இரும் பொழில் வாய் இரை தேர்ந்து
மனக்கு இன்பம் பட மேவும்-வண்டினங்காள் தும்பிகாள்
கனக்கொள் திண் மதிள் புடை சூழ்-திரு மூழிக் களத்து உறையும்
புனக்கொள் காயாமேனிப்-பூந்துழாய் முடியார்க்கே–9-7-8
இரு பொழில் வாய்,Iru pozhil vay - பெரிய சோலையிலே
இரை தேர்ந்து,Irai therndhu - இரையான மதுவைத்தேடிக் கொண்டு
மனக்கு இன்பம் பட மேவும்,Manakku inbam pada mevum - மனதுக்கு இனிமையுண்டாம்படி கலந்துவர்த்திக்கிற
வண்டு இனங்கன காள் தும்பிகாள்,Vandu inankan kaal thumbikal - வண்டுகளே ! தும்பிகளே !
கனம் கொள் திண் மதின் புடை சூழ்,Kanam kol thin madhin pudai soozh - கனத்துத் திண்ணிய மதிவாலே சுற்றும் சூழப்பட்ட
திருமூழிக்களத்து,Thirumoozhikkalathu - திருமூழிக்களத்திலே வாழ்பவராய் உறையும்
புனம் கோள் கரியா மேனி,Punam kol kariya meni - தன்னிலத்தில் வளருகிற காயாம்பூப் போன்ற மேனி நிறத்தையுடையவராய்
பூ துழாய் முடியார்க்கு,Poo thulasi mudiyaarkku - பூந்துழாயை முடியிலே அணித் துள்ளவரான பெரியவர்க்கு
எனக்கு ஒன்று பணியீர்கள்,Enakku onru paniyeergaal - எனக்காக வொரு வார்த்தை சொல்லவேணும்.