Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 3632 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
3632திருவாய்மொழி || (9-7–எங்கானலகங்கழிவாய்) (எம் பெருமானது வடிவழகே பற்றுக்கோடாக தலைவி திருமூழிக்களத்தே பறவைகளைத் தூதுவிடல் (திருமூழிக்களம்)) (நான் முடிவதற்கு முன்னே என்னிலைமையைத் திருமூழிக்களத்தெம்பெருமானுக்கு உரையீரென்று சில அன்னங்களையிரக்கிறாள்.) 10
தகவன்று என்று உரையீர்கள் தடம் புனல் வாய் இரை தேர்ந்து
மிக வின்பம் பட மேவும் மெல் நடைய அன்னங்காள்
மிக மேனி மெலிவு எய்தி மேகலையும் ஈடு அழிந்து என்
அகமேனி ஒழியாமே திரு மூழிக் களத்தார்க்கே–9-7-10
தடபுனல் வாய்,Thadapunal vaai - விசாலமான நீர்நிலங்களிலே
இரை தேர்ந்து,Irai therendhu - இரை தேடிக்கொண்டு
மிக இன்பம் பட மெவும்,Miga inbam pada mevum - பேரானந்தமாகச் சேர்ந்து வாழ்கிற
மெல நடைய அன்னங்காள்,Mela nadaiya annangaal - மெல்லிய நடையையுடைய அன்னங்களே
மேனி மிக மெலிவு எய்தி,Meni miga melivu eydhi - சரீரம் மிகவும் மெலிவடைந்து
மேகலையும் ஈடு அழிந்து,Megalaiyum eedu azhindhu - மேகலையும் தங்காதபடியாகி (அதற்கு மேலே)
என் அகமேனி ஒழியாமே,En agameni ozhiyamae - என் அந்தரங்க ஸ்வரூபம் குலையாத பழிக்கு
திருமூழிக்களத் தார்க்கு,Thirumoozhikkalath thaarkku - திருமூழிக்களத்துறையும் பெருமாளுக்கு
தகவு அன்று என்று உரையீர்கள்,Thakavu anru endru uraiyeergal - இப்படியுபேக்ஷிப்பது நியயாமன்றென்று சொல்லும் கோள்