Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 3639 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
3639திருவாய்மொழி || (9-8—அறுக்கும் வினையாயின) (தூதர் மீளுமளவும் தனிமை பொறாத தலைவி தலைவன் நகரான திருநாவாய் செல்ல நினைத்தல் (திருநாவாய்)) (எனக்காகத் திருநாவாயைக் கோயிலாகக் கொண்டு உறைகின்ற கோவலர்கோவே! உன்பக்கலிலே அநந்ய ப்ரயோஜனமான அன்மையுடையேனான வென்னுடைய கண்களின் விடாய் சொல்லத் தரமன்று; என்பசி தீராவிட்டாலும் என் கண்களின் பசி தீர்ந்தால் போதுமேயென்கிறார்.) 6
கண்டே களிக்கின்றது இங்கு என்று கொல் கண்கள்
தொண்டே உனக்காய் ஒழிந்தேன் துரிசு இன்றி
வண்டு ஆர் மலர்ச் சோலைகள் சூழ் திருநாவாய்
கொண்டே உறைகின்ற எம் கோவலர் கோவே–9-8-6
வண்டு ஆர் சோலைகள் சூழ் மலர் திருநாவாய்,Vandu aar solaigal soozh malar Thirunaavaai - வண்டுகள் நிறைந்த மலரையுடைய சோலைகள் சூழ்ந்த திருநாவாயை
கொண்டு உறைகின்ற,Kondu uraiginra - உகங்தவிடமாகத் திருவுள்ளம்பற்றி வர்த்திக்கிற
எம் கோவலர் கோவே,Em Kovalarkove - எம் கோபாலகிருஷ்ணனே!
துரிசு இன்றி உனக்கே தொண்டு ஆய் ஒழிந்தேன்,Thurisu inri unakke thondru aai ozhindhen - க்ருத்திமமில்லாமல் உனக்கே தொண்டனாய்விட்டேன்
கண்கள்,Kangal - எனது கண்களானவை
இங்கு கண்டே களிக்கின்றது என்று கொல்,Ingu kande kalikkinrathu enru kol - இத் திருப்பதியிலே கண்டு ஆனந்திக்கப் பெறுவது என்றைக்கோ?