Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 3644 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
3644திருவாய்மொழி || (9-8—அறுக்கும் வினையாயின) (தூதர் மீளுமளவும் தனிமை பொறாத தலைவி தலைவன் நகரான திருநாவாய் செல்ல நினைத்தல் (திருநாவாய்)) (இத்திருவாய்மொழி வல்லார் ஐஹிக ஆமுஷ்மிக ஸகலபோகங்களையும் புஜிக்கப் பெறுவர் என்று பயனுரைத்துத் தலைக்கட்டுகிறார்.) 11
வண்ணம் மணிமாடம் நல் நாவாய் உள்ளானைத்
திண்ணம் மதிள் தென் குருகூர்ச் சடகோபன்
பண்ணார் தமிழ் ஆயிரத்து இப்பத்தும் வல்லவர்
மண் ஆண்டு மணம் கமழ்வர் மல்லிகையே–9-8-11
வண்ணம் மணி மாடம்,Vannam mani maadam - அழகிய மணி மாடங்களை யுடைத்தான
நல் நாவாய் உள்ளானை,Nal naavaai ullaanai - விலக்ஷணமான திருநாவாயிவெழுந் தருளியிருக்கும் பெருமானைக் குறித்து
திண் அம்மதின் தென் குருகூர் சடகோபன்,Thin ammadhin then kurukoor sadagopan - திடமாயழகிய மதிள்களையுடைத்தான திருநகரிக்குத் தலைவரான ஆழ்வாருடையதாய்
பண் ஆர் தமிழ்,Pan aar tamizh - பண்ணிறைந்த தமிழான ஆயிரத்தில் ஆயிரத்து
இப்பத்தும் வல்லார்,Ippaththum vallaar - இப்பத்தையும் ஒதவல்லவர்கள்
மண் ஆண்டு,Man aandu - இவ்விபூதியை நெடுங்காலம் ஆண்டு
மல்லிகை மணம் கமழ்வர்,Malligai manam kamalvar - “ஸர்வகந்த:” என்னப்படுகிற எம்பெரு மானோடே ஸாம்யாபத்தி பெறுவர்கள்