| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 3652 | திருவாய்மொழி || (9-9–மல்லிகை கமழ்தென்ற) (தலைவி மாலைப்பொழுது கண்டு தனது ஆற்றாமையால் இரங்கிக் கூறல்) (ஸ்ரீ ஒன்பதினாயிரப்படி –கீழே தனித் தனியும் திரளவும் பாதகமானவை ஒன்றுக்கு ஓன்று முற்கோலி வந்து மேல் விழுந்து நலியா நின்றன -என்கிறாள்.) 8 | புது மணம் முகந்து கொண்டு எறியுமாலோ பொங்கிள வாடை புன் செக்கராலோ அது மணந்து அகன்ற நம் கண்ணன் கள்வம் கண்ணனில் கொடுத்தினியதனிலும்பர் மது மண மல்லிகை மந்தக் கோவை வண் பசும் சாந்தினில் பஞ்சமம் வைத்து அது மணம் தின்ன அருள் ஆய்ச்சியர்க்கே ஊதும் அத் தீம் குழற்கே உய்யேன் நான்–9-9-8 | பொங்கு இன வாடை,Pongu ina vaadai - என்னை நலிய நலியக் கிளர்ந்து இளகிப் பதிக்கிற வாடைக் காற்றானது புது மணம் முகந்து கொண்டு ஏறியும் ஆல் ஓ,Pudhu manam mugandhu kondu eeriyum aalO - புதிய பரிமளத்தை முகந்துகொண்டு வீசாநின்றதந்தோ புன் செக்கர் ஆல் ஓ,Pun sekkar aalO - புல்லிய செக்கர் வானமும் வந்து நலியா நின்றது அது மணந்து அகன்ற,Adhu manandhu akandra - அப்படி கலந்து பிரிந்த நம் கண்ணன்,Nam kannan - நமது க்ருஷ்ணனுடைய கள்ளச் செயல்கள் கள்வம் கண்ணனில்,Kannanil - அவனிற்காட்டிலும் கொடியதாயிரா நின்றது கொடிது இனி அதனில்,Ini adhanil - இன்னமும் அதுக்குமேலே உம்பர் மது மணம் மல்லிகை,Madhu manam mallikai - மதுவையும் மணத்தையுமுடைத்தான மல்லிகையினுடைய மந்தம் கோவை,Mandham kovai - மெல்லிய ஸரமென்ன வண் பசும் சாந்தினில்,Van pasum shaanthinil - அழகிய குளிர்ந்த சந்த மென்ன இவற்றிலுங்காட்டில் பஞ்சமம் வைத்து,Panchamam vaithu - விலஷணமான ராகத்தை யிட்டு அது மணந்து இன் அருள் ஆய்ச்சியர்க்கே ஊதும்,Adhu manandhu in arul aaychiyarkke oodhum - வாசாமகோரமான ஸம்ச்லேஷத்தைப் பண்ணி நல்லருள் செய்யப்பெற்ற ஆய்ச்சிகளுக்கே யூதுகிற அத்தீம்குழற்கே,Atthimkuzharkke - அல்லினிய குழலோசைக்கே நான் உய்யேன்,Naan uyyeen - நான் உயிரைப் பறிகொடப்பவளாயிராநின்றேல் |