Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 3654 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
3654திருவாய்மொழி || (9-9–மல்லிகை கமழ்தென்ற) (தலைவி மாலைப்பொழுது கண்டு தனது ஆற்றாமையால் இரங்கிக் கூறல்) (ஸ்ரீ ஒன்பதினாயிரப்படி –வருவதாக சொன்ன காலமான ராத்திரியும் வந்து மஹா அவசாதம் வர்த்தியா நிற்க அவனைக் காண்கிறிலோம் -இனி பாதகங்களினுடைய சந்நிதியில் அவனை ஒழியத் தரிப்பது அரிது என்கிறாள்.) 10
மாலையும் வந்தது மாயன் வாரான்
மா மணி புலம்ப வல்லேறு அணைந்த
கோல நன் நாகுகள் உகளுமாலோ
கொடியன குழல்களும் குழறுமாலோ
வாலொளி வளர் முல்லை கரு முகைகள்
மல்லிகை யலம்பி வண்டாலுமாலோ
வேலையும் விசும்பில் விண்டு அலறுமாலோ
என் சொல்லி உய்வன் இங்கு அவனை விட்டே–9-9-10
மாலையும் வந்தது,Maalaiyum vandhadhu - மாலைப்பொழுதும் வந்திட்டது
மாயன் வாரான்,Maayan vaaran - கண்ணன் வந்திலன்
மா மணி புலம்ப,Maa mani pulamba - பெரிய மணிகள் ஒலிக்கும் படி
வல் ஏறு அணைந்த,Val eeru anaindha - வலிய ரிஷபங்களோடு சேர்ந்த
கோலம் நல் நாகுகள் உகளும் ஆல் ஓ,Kolam nal naagugal ukalum aalO - அழகிய பசுக்கள் களித்துத் திரிகின்றன வந்தோ!
குழல்களும்,Kuzhalgalum - புல்லாங்குழல்களும்
கொடியன,Kodiyaṉ - கொடுமை செய்வனவாகி
குழறும்,Kuzhalum - இனிய இசையைச் செய்கின்றன
கண்டு,Kandu - வண்டுகளானவை
வால் ஒளி,VaalOli - வெளுத்த வொளியை யுடைத்தான
வளர் முல்லை கரு முகைகள் மல்லிகை அலம்பி,Valar mullai karu mughaigal mallikai alampi - வளர் முல்லை, கருமுகைப்பூ மல்லிகைப்பூ ஆகிய இவற்றிலே படிந்து
ஆலும் ஆலோ,Aadhum aaloo - முரல்கின்றனவந்தோ
வேலையும்,Velaiyum - கடலோதமும்
விசும்பில்விண்டு,Visumbilvindhu - ஆகாசத்திலே அளாவி
அலறும்,Alarum - கோஷிக்கின்றது
இங்கு,Ingu - இந்நிலைமையில்
அவனை விட்டு,Avanai vittu - அப்பெருமானைப் பிரிந்து
என் சொல்லி உய்வன்,En solli uyvan - எங்ஙனம் பிழைப்பேன்