| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 3655 | திருவாய்மொழி || (9-9–மல்லிகை கமழ்தென்ற) (தலைவி மாலைப்பொழுது கண்டு தனது ஆற்றாமையால் இரங்கிக் கூறல்) (ஸ்ரீ ஒன்பதினாயிரப்படி –நிகமத்தில் அவன் பக்கல் சாபலமுடையார் இத்திருவாய் மொழியைச் சொல்லி அவனைப் பெறுங்கோள் என்கிறாள்.) 11 | அவனை விட்டு அகன்று உயிர் ஆற்ற கில்லா அணி யிழையாய்ச்சியர் மாலைப் பூசல் அவனை விட்டகல்வதற்கே யிரங்கி அணி குருகூர்ச் சடகோபன் மாறன் அவனியுண்டு உமிழ்ந்தவன் மேல் உரைத்த ஆயிரத்துள் இவை பத்தும் கொண்டு அவனியுள் அலற்றி நின்று உய்ம்மின் தொண்டீர் அச் சொன்ன மாலை நண்ணித் தொழுதே–9-9-11 | அவனை விட்டு அகன்று,Avanai vittu akandra - கண்ண பிரானை விட்டுப் பிரிந்து உயிர் ஆற்றகில்லா,Uyir aatrakillaa - உயிர் தரிக்கமாட்டாத அணி இழை ஆராய்ச்சியர்,Ani izhai aaraaychiyar - அழகிய ஆபரணங்களணிந்த கோபிமார்கள் மாலை பூசல்,Maalai poosal - மாலைப் பொழுதிலே பட்ட பாட்டை அவனை விட்டு அவல்வதற்கே இரங்கி,Avanai vittu avalvadharke irangi - அப்பெருமானை விட்டு பிரிந்திருக்கை காரணமாக நோவுபட்டு அணி குருகூர் சடகோபன் மாறன்,Ani Kurukoor Sadagopan Maaraṉ - ஆழ்வார் அவனி உண்டு உமிழ்ந்தவன் மேல் உரைத்த,Avani undu umizhndhavan meel uraintha - பூமிணை உண்டுமிழ்ந்த அப்பெருமான் விஷயமாக அருளிச் செய்த ஆயிரத்ததுள் இவை பத்தும் கொண்டு,Aayirathathul ivai pathum kondu - ஆயிரத்தினுள் இப்பதிகங் கொண்டு தொண்டீர்,Thondir - தொண்டர்களே அவனியுள் அலற்றி நின்று,Avaniyul alattri ninru - பூமிக்குள்ளே உகந்து அநுஸந்தித்து |