| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 3657 | திருவாய்மொழி || 9-10 மாலை நண்ணி (“கள்ளவிழும் மலரிட்டு இறைஞ்சுமின் “என்று அருளிச் செய்கையாலே இன்ன மலரென்று ஒரு நிர்ப்பந்தமில்லை யென்பது காட்டப்படும். கீழ்ப்பாட்டில் “கமல மலரிட்டு ” என்றது– கமல மலரேயாக வேணுமென்றும் அதுபோன் சிறந்த மலரேயாக வேணுமென்றும் காட்டினபடியன்று என்பதை இப்பாட்டில் தெளியவைத்தாராயிற்று..) 2 | கள் அவிழும் மலரிட்டு நீர் இறைஞ்சுமின் நள்ளி சேரும் வயல் சூழ் கிடங்கின் புடை வெள்ளி ஏய்ந்த மதிள் சூழ் திருக் கண்ணபுரம் உள்ளி நாளும் தொழுது எழுமினோ தொண்டீரே–9-10-2 | Thondare,தொண்டரே - எம்பெருமானிடத்து ஆசையுள்ளவர்களே Neer,நீர் - நீங்கள் Kal avizhum malar,கள் அவிழும் மலர் - தேனொழுகுகின்ற புஷ்பங்களைப் பணிமாறி Iraijin,இறைஞ்சுமின் - வணங்குங்கள் Nalli serum,நள்ளி சேரும் - பெண் நண்டுகள் களித்த வாழப்பெற்ற கழனிகள் சூழ்ந்த Vayal sul kidankin,வயல் சூழ் கிடங்கின் - அகழ்களைப் பக்கங்களிலே யுடையதும்புடை Velli aaynth madhin soo zh,வெள்ளி ஏய்ந்த மதின் சூழ் - சுக்கிரனைத் தொட்டுக் கொண்டிருக்கிற மதிள்களாலே சூழப்பட்டதமான Thiru Kannapuram,திரு கண்ணபுரம் - திருக்கண்ணபுரத்தை Ullli,உள்ளி - சிந்தனை செய்து கொண்டு Naalum,நாளும் - நாடோறும் Thozhudhu ezumin,தொழுது எழுமின் - வணங்கி உஜ்ஜீவியுங்கள் |