| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 3658 | திருவாய்மொழி || 9-10 மாலை நண்ணி (திருக்கண்ணபுரத்திலே நின்றருளினவன் உபயவிபூதி நாதனாயிற்று; தொண்டர்களே உங்கள் துக்கங்கெட அநந்யப்ரயோஜநராய்க் கொண்டு ஆச்ரயியுங்கோளென்கிறார்) 3 | தொண்டீர் நும் தம் துயர் போக நீர் ஏகமாய் விண்டு வாடா மலரிட்டு நீர் இறைஞ்சுமின் வண்டு பாடும் பொழில் சூழ் திருக் கண்ணபுரத்து அண்ட வாணன் அமரர் பெருமானையே–9-10-3 | Thondar,தொண்டர் - தொண்டர்களே Vantu paadum pozhi soo zh,வண்டு பாடும் பொழிழ் சூழ் - வண்டுகள் பாடுமிடமான் சோலைகளாலே சூழப்பட்ட Thiru Kannapurathu,திரு கண்ணபுரத்து - திருக் கண்ணபுரத்தி வெழுந்தருளியிருக்கிற Andam vaanan amarar perumaa nai,அண்டம் வாணன் அமரர் பெருமானை - அகிலாண்ட கோடி ப்ரஹ மாண்டநாயகனான எம்பெருமானை Thum tham thuyar poka,தும் தம் துயர் போக - உங்களுடைய துக்கம் தொலையும்படி Neer aegam aay,நீர் ஏகம் ஆய் - நீங்கள் அநந்ய ப்ரயோஜநர்களாய் Vindu vaadaa malar ittu,விண்டு வாடா மலர் இட்டு - மலர்ந்து வாடாத (அப்போதலர்ந்த) பூக்களைப் பணிமாறி Neer iraijumeen,நீர் இறைஞ்சுமீன் - நீங்களே தொழுங்கள் |