| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 3659 | திருவாய்மொழி || 9-10 மாலை நண்ணி (ஆச்ரயிக்குமளவில் நப்பின்னைப்பிராட்டி புருஷகாரமாக ஆச்ரயியுங்கொள்; அவளுடைய புருணகாரபலத்தாலே பேறு தப்பாதென்கிறார்.) 4 | மானை நோக்கி மடப்பின்னை தன் கேள்வனைத் தேனை வாடா மலர் இட்டு நீர் இறைஞ்சுமின் வானை உந்தும் மதிள் சூழ் திருக் கண்ணபுரம் தான் நயந்த பெருமான் சரண் ஆகுமே–9-10-4 | Maanai nokki mada pinai than kaelvanai,மானை நோக்கி மட பின்னை தன் கேள்வனை - மானை யொத்த கண்பார்வையை யுடையளான நப்பின்னைப்பிராட்டிக்கு நாதனும் Kaenai,கேணை - தேன்போல் இனியனுமான எம்பெருமானை Vaadaa malar ittu neer iraijchamin,வாடா மலர் இட்டு நீர் இறைஞ்சமின் - அப்போதலர்ந்த செவ்விப் பூக்களையிட்டு நீங்கள் தொழுங்கள் Vaanai undhum madhil soo zh,வானை உந்தும் மதிள் சூழ் - ஆகாசத்தை யளாவியிருக்கின்ற மதிகளாலே சூழப்பட்ட Thiru Kannapuram,திருக்கண்ணபுரம் - திருக்கண்ணபுரத்தை Nayanda perumaan thaane,நயந்த பெருமான் தான் - விரும்பியிருக்கின்ற சௌரிப்பெருமானே Saran aagum,சரண் ஆகும் - ரக்ஷகராவர் |