| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 3661 | திருவாய்மொழி || 9-10 மாலை நண்ணி ( தன தாளடைந்தார்க்கெல்லாம் அன்பனாகும்= “அநாலோசித விசேஷாசேஷ லோகசரண்ய!” என்று எம்பெருமானாரருளிச் செய்வதை இங்கு அநுஸந்திப்பது. தனது திருவடிகளையுடைந்தாரில் இன்னாரினையாசென்று வாசி பாராதே வஸிஷ்ட சண்டாள விபாகமற எல்லார்க்குமொக்க ஸ்நேஹிக்குமவன் எம்பெருமான் என்று ஆழ்வானருளிச் செய்தது இங்கே அநுஸந்தேயம்.) 6 | அன்பன் ஆகும் தன தாள் அடைந்தார்க்கு எல்லாம் செம்பொன் ஆகத்து அவுணன் உடல் கீண்டான் நன் பொன் ஏய்ந்த மதிள் சூழ் திருக் கண்ணபுரத்து அன்பன் நாளும் தன் மெய்யர்க்கு மெய்யனே–9-10-6 | Thana thaal adainthaarkku ellaam,தன தாள் அடைந்தார்க்கு எல்லாம் - தனது திருவடிகளைப்பற்றினாரெல்லார்க்கும் Anban aagum,அன்பன் ஆகும் - அன்பு செய்பவனாய் Sempon aagathu avunan udal keentavan,செம்பொன் ஆகத்து அவுணன் உடல் கிண்டவன் - சிவந்த பொன்போன்ற அடம்பையுடைய இரணியாசுரனது உடைலைக் கீண்டவனாய் Naan pon eyndha madhil sooal,நான் பொன் எய்ந்த மதிள் சூழ் - நல்ல பொன்னாலே யமைத்த மதிளாலே சூழப்பட்ட Thiru Kannapurathu Anban,திரு கண்ணபுரத்து அன்பன் - திருக்கண்ணபுரத்திலே விருப்பமுடையவனான எம்பெருமான் Thana meyyarkku,தன மெய்யர்க்கு - தன் திறத்திலே உண்மையாக ஸ்நேஹிக்குமவர்களுக்கு Naalum meyyan,நாளும் மெய்யன் - எப்போதும் உண்மையான ஸ்நேஹமுடையவன் |