Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 3661 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
3661திருவாய்மொழி || 9-10 மாலை நண்ணி ( தன தாளடைந்தார்க்கெல்லாம் அன்பனாகும்= “அநாலோசித விசேஷாசேஷ லோகசரண்ய!” என்று எம்பெருமானாரருளிச் செய்வதை இங்கு அநுஸந்திப்பது. தனது திருவடிகளையுடைந்தாரில் இன்னாரினையாசென்று வாசி பாராதே வஸிஷ்ட சண்டாள விபாகமற எல்லார்க்குமொக்க ஸ்நேஹிக்குமவன் எம்பெருமான் என்று ஆழ்வானருளிச் செய்தது இங்கே அநுஸந்தேயம்.) 6
அன்பன் ஆகும் தன தாள் அடைந்தார்க்கு எல்லாம்
செம்பொன் ஆகத்து அவுணன் உடல் கீண்டான்
நன் பொன் ஏய்ந்த மதிள் சூழ் திருக் கண்ணபுரத்து
அன்பன் நாளும் தன் மெய்யர்க்கு மெய்யனே–9-10-6
Thana thaal adainthaarkku ellaam,தன தாள் அடைந்தார்க்கு எல்லாம் - தனது திருவடிகளைப்பற்றினாரெல்லார்க்கும்
Anban aagum,அன்பன் ஆகும் - அன்பு செய்பவனாய்
Sempon aagathu avunan udal keentavan,செம்பொன் ஆகத்து அவுணன் உடல் கிண்டவன் - சிவந்த பொன்போன்ற அடம்பையுடைய இரணியாசுரனது உடைலைக் கீண்டவனாய்
Naan pon eyndha madhil sooal,நான் பொன் எய்ந்த மதிள் சூழ் - நல்ல பொன்னாலே யமைத்த மதிளாலே சூழப்பட்ட
Thiru Kannapurathu Anban,திரு கண்ணபுரத்து அன்பன் - திருக்கண்ணபுரத்திலே விருப்பமுடையவனான எம்பெருமான்
Thana meyyarkku,தன மெய்யர்க்கு - தன் திறத்திலே உண்மையாக ஸ்நேஹிக்குமவர்களுக்கு
Naalum meyyan,நாளும் மெய்யன் - எப்போதும் உண்மையான ஸ்நேஹமுடையவன்