Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 3662 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
3662திருவாய்மொழி || 9-10 மாலை நண்ணி ( இப்படி மெய்யர்க்கே மெய்யனாயும் பொய்யர்க்கே பொய்யனாயுமிருக்கு மிருப்பைத் திருக்கண்ணபுரத்திலே காட்டிக் கொண்டு வர்த்திக்கும் பெருமான் , ஆகத்து அணைப்பார்கட்கு அணியன் தன்னை ஹருதயத்திலே வைப்பார்க்குக் கையாளாயிருப்பன்.) 7
மெய்யனாகும் விரும்பித் தொழுவார்க்கு எல்லாம்
பொய்யானாகும் புறம்பே தொழுவார்க்கு எல்லாம்
செய்யல் வாளை உகளும் திருக் கண்ணபுரத்து
ஐயன் ஆகத்து அணைப்பார்கட்கு அணியனே –9-10-7
Virumbi thozhu vaarkku ellaam,விரும்பி தொழு வார்க்கு எல்லாம் - தன்னையே புருஷார்த்தமாக ஆசைப்பட்டு தொழுமவர்களெல்லார்க்கும்
Meyyan aagum,மெய்யன் ஆகும் - மெய்யன்பனாய்
Purame thozhuvaarkku ellaam,புறமே தொழுவார்க்கு எல்லாம் - பிரயோஜநாந்தாங்களுக்காக மேலெழுத் தொழுமவர்களுக்கெல்லாம்
Poyyan aagum,பொய்யன் ஆகும் - தன்னை உள்ளபடி காட்டமாட்டாதவனாய்
Seiyilvaalai ugalum Thiru Kannapurathu Aiyan,செய்யில்வாளை உகளும் திரு கண்ணபுரத்து ஐயன் - கழனிகளில் வாளை மீன்கள் துள்ளி விளையாடப் பெற்ற திருக்கண்ண புரத்திலே யெழுந்தருளி யிருப்பவனான எம்பெருமான்
Aagathu anaip paarkatku,ஆகத்து அணைப் பார்கட்கு - தங்கள் மனத்தில் ஊன்றவைத்துக் கொள்பவர்களுக்கு